Skip to main content

ராகுல், க்ருனால் பாண்டியா அதிரடி! -  வலுவான ஸ்கோரை எட்டிய இந்தியா!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

K PANDYA KL RAHUL

 

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ரோகித்-தவான் இணை பொறுமையாக ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து தவான் - விராட் இருவரும் இணைந்து ரன்களை சேர்த்தனர்.

 

விராட் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய தவான், துரதிருஷ்டவசமாக 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஒருபக்கம் கே.எல் ராகுல் அதிரடியாக ஆட மறுபக்கம் ஸ்ரேயஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய க்ருனால் பாண்டியா, அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினார்.

 

கே.எல் ராகுல் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி ஐம்பது ஓவர் முடிவில் 317 ரன்களை குவித்தது. க்ருனால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்களோடும், கே.எல் ராகுல் 43 பந்துகளில் 62 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.