Skip to main content

ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் இஷான் கிஷனின் அசத்தல் ஆட்டம்.. வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Fantastic performance by Shreyash Iyer and Ishan Kishan.. A fallen South Africa

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்துவிட்டு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. 

 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி தேர்வு செய்யப்பட்டது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மார்க்ரம் மற்றும் ஹென்ட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். முடிவில் 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 278 ரன்களை சேர்த்தது.அதிகபட்சமாக ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்களும் மார்க்ரம் 79 ரன்களும் எடுத்திருந்தனர். 

 

279 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர்தவான் 13 ரன்களில் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய சுப்மன் கில் 28 ரன்களில் வெளியேறினார். இதன் பின் கைகோர்த்த இஷான் கிஷன் மற்று ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 282 அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய அணியில் ஸ்ரேயாஷ் ஐயர் 113 ரன்களும் இஷான் கிஷான் 93 ரன்களையும் எடுத்திருந்தனர்.

 

ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

Next Story

“இந்த போட்டியில் பாடங்களை கற்றுக் கொண்டோம்” - ரோஹித் சர்மா

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

“Lessons learned in this match” - Rohit Sharma

 

8 ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

 

பெர்த் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார்.

 

சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்களும் பார்னெல் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டனாகவும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் எடுத்தார்.

 

134 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்தில் சில விக்கெட்களை இழந்தாலும் மார்க்ரம், மில்லர் ஜோடி இணைந்து தென் ஆப்பிரிக்க அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. 19.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் ஷமி, ஹர்திக், அஷ்வின் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். ஆட்டநாயகனாக இங்கிடி தேர்வு செய்யப்பட்டார்.

 

ஆட்டம் முடிந்ததும் ரோஹித் சர்மா போட்டி குறித்து பேசினார். அதில், “நாங்கள் பீல்டிங் சரியாக செய்யவில்லை என்பது உண்மை. நாங்கள் சில ரன் அவுட்களை விட்டுவிட்டோம். இந்த போட்டியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டோம். அதே சமயத்தில்  மில்லர் சில ஷாட்களை மிகச் சிறப்பாக ஆடினார்” என்றார்.

 

 

Next Story

தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சினை சமாளிக்குமா இந்தியா; உலகக் கோப்பையில் பலப்பரீட்சை

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Will India tolerate South Africa's bowling? Multiple Tests in World Cup

 

அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று அனைத்தும் முடிவடைந்த பிறகு சூப்பர் 12 சுற்று நடைபெறுகிறது. 

 

அனைத்து அணிகளும் அரையிறுதி வாய்ப்பிற்காக போராடி வருகின்றன. இந்திய அணி தான் எதிர்கொண்ட இரு அணிகளிடமும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் பரபரப்பாக இறுதி ஓவர் வரை சென்று வெற்றி பெற்ற இந்திய அணி நெதர்லாந்து உடனான ஆட்டத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. 

 

தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலைத் தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சிலும் அர்ஷ்தீப் சிங் அசத்துகிறார். புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி தேவையான நேரத்தில் விக்கெட்களை எடுப்பதோடு குறைவான ரன்களையே விட்டுக் கொடுக்கின்றனர். இன்றும் இதே ஆட்டம் தொடர்ந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். 

 

தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் டின் காக் மற்றும் ரூசோ நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சிலும் நூர்ட்ஜே மஹாராஜ் மற்றும் ஷாம்ஷி ஆகியோர் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் விக்கெட்களை எடுக்கின்றனர். இரு அணிகளையும் ஒப்பிட்டால் தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சில் ஒரு படி மேல் உள்ளது.  

 

இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை கொடுக்காமல் நிலையாக ஆடினால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். இன்று மாலை 4.30 மணிக்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.