Skip to main content

உணவு, தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த 200 யானைகள்... காண்போரை கலங்க வைத்த புகைப்படங்கள்...

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

உணவு, தண்ணீர் இல்லாமல் பட்டினியால் 200 யானைகள் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

zimbabwe drought costs lives of 200 elephants

 

 

சர்வதேச அளவில் பருவநிலை மாறுபாடு குறித்து அதிக அளவில் விவாதிக்கப்பட்டு, அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனலாம். அந்த வகையில் ஜிம்பாப்வே நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவு, தண்ணீர் இல்லாமல் பட்டினியால் 200 யானைகள் உயிரிழந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால் அங்கு கடுமையான வறட்சி நிலவி வருவம் நிலையில், விலங்கியல் பூங்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் முழுவதும் வற்றி, மரங்கள், செடிகள் காய்ந்து தாவரங்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த மோசமான வறட்சியால் ஜிம்பாப்வேயில் நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் உணவு கிடைக்காமல்  200க்கும் மேற்பட்ட யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து  சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டகசிவிங்கிகள், 2000 யானைகள் ஆகிய விலங்குகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த யானைகள் பாதிக்கப்பட்டும், இறந்தும் உள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி, பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்