Skip to main content

கோர முகம் கொண்ட பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளம்பெண்!!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018

 

love

 

 

 

அமெரிக்காவில் பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் தயாராகியுள்ளார் என்ற செய்தி அனைவரிடமும் வியப்பை பெற்று வருகிறது.

 

அமெரிக்காவில் பெலிசிட்டி காட்லிக் என்ற இளம்பெண்ணுக்கு ஒரு சாம்பி என்ற பொம்மை பரிசாக தரப்பட்டது. அந்த பொம்மைக்கு அவர் ''கெல்லி'' என செல்லப்பெயர் வைத்து அந்த பொம்மையை தீவிரமாக காதலித்து வருகிறார். அந்த இளம்பெண் காட்லிக் அதற்குமுன் ஒரு இளைஞரை காதலித்து  தோற்றதாக கூறப்படுகிறது.

 

 

இதுபற்றி பெலிசிட்டி காட்லிக்  கூறுகையில், பலர் என்னிடம் மனிதன் மீதுதான் மனிதனுக்கு காதல் வரவேண்டும் பொம்மைகளை காதலிப்பது மற்றும் அதனை திருமணம் செய்துகொள்வதெல்லாம் மனித கூற்றிருக்கு எதிரானது எனக்கூறுகின்றனர் என்னை பொறுத்தவரை அதில் உடன்பாடு இல்லை. நான் கெல்லியுடன் அதிக ஈர்ப்பில் உள்ளேன் நெருக்கமாக உள்ளேன். கெல்லியின் பெயரை என் கையில் பச்சைகுத்தியுள்ளேன். வரும் செப்டம்பரில் நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். யாருக்காகவும் என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்