Skip to main content

இலங்கையில் மீண்டும் அவசர நிலை!

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

State of emergency again in Sri Lanka!

 

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

 

மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கையில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இலங்கையில் போராட்டங்கள் காரணமாக அவசரநிலை மற்றும் ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்