Published on 09/10/2018 | Edited on 09/10/2018

கர்நாடக மாநிலத்தில் ஒரு குரங்கு, பேருந்தை ஒட்டிய சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலானது. தற்போது இந்த வீடியோவைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது "சமீபத்தில் நான் ஒரு வீடியோவை பார்த்தேன், அதில் ஒரு குரங்கு பேருந்தை இயக்குவதுபோல் இருந்தது. அந்தக் குரங்கும் அந்தப் பேருந்தை இயக்குவது அதுதான் என்று நினைத்துக்கொள்ளும். ஆனால், உண்மையில் அந்தப் பேருந்தை ஓட்டுனர்தான் இயக்குவார். அதுபோல்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்" என்று குறிப்பிட்டுள்ளார்.