Skip to main content

ஏடிஎம்-யை ஜேசிபியால் உடைத்து கொள்ளை... வைரலாகும் வீடியோ!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி கொள்ளையடிப்பது ஒரு ரகம் என்றால், அதைவிட அட்வான்ஸாக நேரடியாக எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவமும் தற்போது நடைபெற்றுள்ளது.

 


வடக்கு அயர்லாந்து பகுதியின் டன்கிவன் நகரில் நான்கிற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஜே.சி.பி வாகனத்தை வைத்து ஏடிஎம் எந்திரம் ஒன்றை மொத்தமாக உடைத்து அவர்கள் கொண்டுவந்திருந்த காரில் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்