Skip to main content

உலகிலேயே முதன்முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

The first country in the world to celebrate New Year

 

உலகம் முழுவதும் மக்கள் 2022 ஆம் ஆண்டைக் கடந்து 2023 ஆண்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

 

அனைத்து மக்களும் பாரபட்சமின்றி அடுத்த ஆண்டிற்கான துவக்கத்திற்கு கவுண்டவுனை எண்ணத் துவங்கியுள்ளனர். மக்கள் ஆவலுடன் கொண்டாடும் அதே சமயத்தில் அரசு சார்பில் கட்டுப்பாடுகளும் கொண்டாட்டத்திற்கான நெறிமுறைகளும் விதிக்கப்படும். 

 

நள்ளிரவில் வாணவேடிக்கைகளும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதும் வெடிவெடித்துக் கொண்டாடுவதும் என அரசு எத்தனை கட்டுப்பாடுகளைப் போட்டாலும் அதைத் தடுக்க முடியாது.

 

இந்நிலையில் உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து 2023 ஆம் ஆண்டை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் ஆக்லாந்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஆக்லாந்து ஸ்கை டவரில் வண்ணமயமான வெடிகள் வெடித்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

 

இந்நாட்டை தொடர்ந்து ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் புத்தாண்டு பிறக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்