Skip to main content

அணுஆயுத திறனை விரிவுபடுத்தும் சீனா... செயற்கைக்கோள் புகைப்பட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

china

 

உலகின் பிரச்சனைக்குரிய நாடுகளில் ஒன்று சீனா. உள்நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங், திபெத் மீதான அடக்குமுறை, அண்டை நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிப்பது போன்ற நடவடிக்கைகளால் சீனா, சர்வதேச அளவில் விமர்சனங்களுக்கும், கண்டிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளது.

 

அமெரிக்காவும் சீனாவிற்கெதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், சீனா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இருப்பு வைக்கும் கிடங்குகளை ஏற்படுத்திவருவது தெரியவந்துள்ளது. ஜேம்ஸ் மார்ட்டின் சென்டர் ஃபார் நான்ப்ரோலிஃபெரேஷன் ஸ்டடீஸைச் சேர்ந்த நிபுணர்கள், பிளானட் என்ற வர்த்தக நிறுவனம் வழங்கிய செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

 

கன்சு மாகாண பாலைவனத்தில் 700 சதுர மைல்கள் பரப்பளவில், சுமார் 119 ஏவுகணை கிடங்குகளை சீனா அமைத்திருப்பதாகவும், இவை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அணுஆயுத ஏவுகணைகளை இருப்பு வைக்க உருவாக்கப்பட்டிருக்கலாம் என செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

மேலும் அந்தப் பகுதியில், நிலத்திற்கு அடியிலான பதுங்கு குழிகள், சிறிய இராணுவ தளம் ஆகியவை இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிலத்திற்கு அடியிலான பதுங்கு குழிகள், ஏவுகணைகளை ஏவுவதற்காக பயன்படுத்தப்படலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இந்தக் கட்டுமானங்கள் சீனா, தனது அணு ஆயுதத் திறனை விரிவுபடுத்திவருவதைக் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அணு ஆயுதப் படைகளின் தலைவர், சீனா வேகமாக தனது அணு ஆயுதத் திறனை விரிவுசெய்துவருவதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலக நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துவரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.