திருச்சி மாவட்டம், துறையூர் புலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (24). இவருக்கும் மதுரபுரி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். தொடர்ந்து பிரியதர்ஷினிக்கு இருமல் மற்றும் ஜலதோசம் இருந்தநிலையில், மூச்சு திணறல் இருந்துவந்துள்ளது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தத் தனியார் மருத்துவமனை உடனடியாக பிரியதர்ஷினியை துறையூர் அரச மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்ல கூறியுள்ளனர்.
அதனால், பிரியதர்ஷினியை தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பிரியதர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் எற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனை கேட்டு அவரது கணவர், பிரியதர்ஷினியின் தந்தை உட்பட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினியின் தந்தை சேகர் காவல்துறையில் தனது மகள் மரணம் குறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.