Skip to main content

ஃபேஸ்புக் மூலம் பழகி சட்டக்கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞருக்கு அரிவாள்வெட்டு!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

ஃபேஸ்புக் மூலம் பழகி குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்த நபருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது.

murder


சென்னை அம்பத்தூரில் சட்டக் கல்லூரி மாணவியான சத்யாபிரியா என்பவரை திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது.  பேஸ்புக் மூலம் பழகி குடித்தனம் நடத்தி விட்டு மாணவி சத்தியப் பிரியாவை இளைஞர் லாரன்ஸ் என்பவர் ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில் மகளை ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை சக்திவேல் அரிவாளால் லாரன்ஸை வெட்டியுள்ளார்.

படுகாயம் அடைந்த லாரன்ஸுக்கும் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இளைஞரை வெட்டிய மாணவியின் தந்தை சக்திவேல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்