Skip to main content

குடும்ப தகராறில் தலையிட்ட சித்தப்பா; குத்திக் கொன்ற வாலிபர்!

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

young man stabbed to passed away relatives who intervened in the family issue

 

நாமக்கல் அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர், சித்தப்பா என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோகிணி (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தினமும் இரவில் மது போதையில் வரும் அவர், மனைவியிடம் தகராறு செய்து  வந்துள்ளார்.

 

மே 12ம் தேதி இரவும் அவர் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த அவருடைய சித்தப்பா சேட்டு (60) சண்டையை விலக்கி விட்டுள்ளார். விஜயகுமார் மது குடித்து வருவதையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, “என் குடும்ப தகராறில் நீ ஏன் தலையிடுகிறாய்?” எனக் கேட்டு, சித்தப்பா என்றும் பாராமல் சேட்டுவை சரமாரியாகக் குத்தினார். கத்திக்குத்தால் பலத்த காயமடைந்த சேட்டு, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இந்த களேபரம் குறித்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேட்டுவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

 

இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். குடும்ப தகராறை விலக்கி விட்டு சமாதானம் பேச வந்த சித்தப்பாவை குடி போதையில் வாலிபர் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.