சென்னையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு பாயாசத்தில் மயக்க மருந்து கொடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பிவி கோயில் பகுதியில் வசித்து வருபவர் அலமேலு மூதாட்டி. இவர் அப்பகுதியில் தனியாக ஒருவீட்டில் வசித்து வருகிறார். இவர் தினமும் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்லும் போது அப்பகுதியில் உள்ள பத்மாவதி என்ற பெண் அந்த பாட்டிக்கு பழக்கமாகியுள்ளார். சில நாட்கள் இவ்வாறு கடந்த நிலையில், நேற்று அந்த பாட்டி கோயிலுக்கு செல்லும் போது அங்கு வந்த அந்த பெண் தனக்கு திருமண நாள் என்று கூறி, மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்துள்ளார்.
பாயாசத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அதை அருந்திய மூதாட்டி சில நிமிடங்களில் மயக்கமடைந்தார். இதனை பயன்படுத்திய அந்த பெண், அவரிடம் இருந்து 5 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்த பாட்டி தன்னிடம் அந்த பெண் நகையை எடுத்துச் சென்றதை கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அந்த மூதாட்டி புகார் தெரிவித்ததை அடுத்து பத்மாவதியிடம் இருந்து நகையைப் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.