Skip to main content

தற்கொலைக்கு காரணமானவர்களை காப்பாற்ற மிரட்டல் விடுத்த ஆய்வாளர்..! நக்கீரன் ஆக்ஷன் ரிப்போர்ட்..!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

Woman passes away in chennai mgr nagar.. police investigation

 

கடந்த ஜூலை 9ஆம் தேதி நமக்கு வந்த அந்த அழைப்பில் பேசிய நபர், “என் பெயர் ராஜன். என் மனைவி ரேணுகா. கடந்த ஜூலை 8ஆம் தேதி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், இதற்கு காரணம் அவர் வேலை செய்துகொண்டிருந்த ஹெல்த் அபோ சிக்ஸ்டி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த காவியா இருவரும்தான் என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

Woman passes away in chennai mgr nagar.. police investigation

 

தற்கொலைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால், என் மீதே வழக்கு போடுவேன் என்று ஆய்வாளர் கிருஷ்ணன் மிரட்டினார். நான் சென்னை, எம்.ஜி.ஆர் நகர், பெரியார் தெருவில் இரண்டு மகள்கள் மற்றும் மாமியார் என குடும்பத்துடன் வசித்துவருகிறேன். கடந்த ஜூலை 8ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் வெளியே சென்று வீடு திரும்பினேன். என் மனைவி எங்கே என்று கேட்டதற்கு, “அம்மா தூங்குகிறார்” என்று என் மகள் கூறினார். 

 

நீண்டநேரம் ஆனதால் கதவைத் தட்டினேன். ஆனால், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துப் பார்த்தேன். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக கயிறை அறுத்து, பக்கத்துல இருக்கும் கே.எம். மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப் போனோம். ஆனா அவுங்க ரேணுகா ஏற்கனவே இறந்துவிட்டார் என்றனர். அதனைத் தொடர்ந்து போலீசுக்குத் தகவல் கொடுக்கவே, போலீசார் பிணத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  

 

Woman passes away in chennai mgr nagar.. police investigation

 

என் மனைவி ரேணுகா தற்கொலை செய்துகொண்டதற்கு முன் எழுதிய கடிதத்தில், அவர் வேலை செய்துவந்த அசோக் நகரில் இயங்கிவரும் ஹெல்த் அபோ சிக்ஸ்டி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சீனிவாசன் மற்றும் காவியா இருவரும்தான் காரணம் என்று எழுதியிருந்தார். அதனால் போலீசில் அளித்த புகாரில் என் மனைவி தற்கொலைக்கு காரணமான அந்த இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆர். நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன், புகார் வாங்க மறுத்துவிட்டார். மாறாக என் மனைவி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக புகாரை எழுதி கொடுக்கச் சொன்னார். 

 

நான் மறுக்கவே அன்று என் புகாரை வாங்காமல் அனுப்பிவிட்டார். மீண்டும் அடுத்த நாள் காலை அவரை சந்தித்தோம். அவரோ, "நான் சொல்ற மாதிரி புகார் கொடுத்தால்தான் பிணத்தை பிரேதப் பரிசோதனை செய்ய எஃப்.ஐ.ஆர் தருவேன். இல்லையென்றால் முடியாது என்று எங்களிடம் காட்டமாக பேசினார். வேறு வழி தெரியாமல் நக்கீரனை தொடர்புகொண்டோம்” என்றார். 

 

உடனே களத்தில் இறங்கியது நக்கீரன். முதலில் ஆய்வாளர் கிருஷ்ணனிடம் பேசினோம், சரியாக பதில் கூறாத காரணத்தால் தி.நகர் துணை கமிஷ்னர் அரிகிரன் பிரசாத்திடம் தெரிவித்தோம். உடனடியாக அந்தப் புகாரை வாங்கிக்கொண்டு, பிணத்தைப் பிரேதப் பரிசோதனை செய்ய எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

 

அதன்படி வழக்குப் பதிவுசெய்து, ரேணுகாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்கள் மீது, தான் இறந்த பின்பாவது நியாயம் கிடைக்கும் என்று விரிவாக காரணத்தைத் தெளிவுப்படுத்தி கடிதம் எழுதிவிட்டு தன் உயிரை விட்ட ரேணுகாவின் கோரிக்கை மீது கிருஷ்ணன் போன்ற காவல் ஆய்வாளர்கள், அது பெரிய நிறுவனம் என்ற சப்பைக்கட்டு கட்டி வழக்கை எளிதில் முடிக்க, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றவாளிகளைக் காக்கும் கரங்களாக உள்ளார்கள் என்பது வேதனைக்குரியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.