Skip to main content

மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல - வேல்முருகன் எச்சரிக்கை

Published on 10/04/2018 | Edited on 10/04/2018


சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தோடு மட்டுமில்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட்டை நேரில் காணச் செல்லும் ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட கண்டிசன்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து நாகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,

தண்ணீர் பாட்டில், கர்ச்சிப், பேனா எடுத்துப்போகக் கூடாது என்கிறார்கள்.. மலைகளில் இருக்கும் அனைத்து நாகப் பாம்புகளை எடுத்து வந்து மைதானத்தில் விடப்போகிறார்கள். அந்த பாம்புகளை பிடிக்க விளையாட்டு வீரர்களும், காவல்துறையினரும் ஐபிஎல் விளையாட போகிறார்கள்.. நாங்கள் வேடிக்கை பார்க்க போகிறோம். நூற்றுக்கணக்கான பாம்புகளை விடப்போவதாக கூறுகிறார்கள். வாட்ஸ் ஆப்களில் செய்திகள் வளம் வருகிறது என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்