Skip to main content

திமுக மா.செ காரை மறித்து தொண்டர்கள் போராட்டம்! 

Published on 08/02/2020 | Edited on 08/02/2020


திருப்பத்தூர் மாவட்டம், (வேலூர் மேற்கு மாவட்டம்) திமுக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த முத்தமிழ்செல்வியிடம்மிருந்த மா.செ  பதவியில் இருந்து நீக்கப்பட்டு பிப்ரவரி 6 ந்தேதி முன்னாள் திமுக மா.செ ஆலங்காயம் தேவராஜ் என்பவரை வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்து திமுக தலைமை அறிவித்தது.

 

 Volunteers struggle over DMK car

 

இது மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் ஒரு சாரார் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில், அதிமுக கைக்கூலி தேவராஜ் திமுக மா.செ வா என கேள்வி எழுப்பி கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் நகர பகுதிக்கு பிப்ரவரி 7 ந்தேதி இரவு கட்சி நிர்வாகிகளை சந்திக்க மா.செ வருகை புரிந்ததை தெரிந்த சில திமுகவினர் அவரது காரை திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் மறித்து மா.செ வுக்கு எதிராக, திருப்பத்தூர் பகுதியில் நுழைய விடாமல்  எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்டோர் அதிமுக கைக்கூலி என கோஷமிட்டனர்.

இதனால் மா.செ தேவராஜ் காரில் திரும்பி சென்றார். இதனால் திருப்பத்தூர் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்