Skip to main content

விநாயகர் கோயில் குடமுழுக்கு... சீர் கொண்டு வந்து சிறப்பித்த இஸ்லாமியர்கள்! (படங்கள்)

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

கல்லூரி மாணவி தொடங்கி வாக்களிக்கச் சென்ற இஸ்லாமியப் பெண் வரை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று மதப்பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது ஒரு கும்பல். ஆனால் நாங்கள் இந்து- இஸ்லாம் என்ற பாகுபாடின்றி சகோதரத்துவத்தோடு தான் இருக்கிறோம் என்பதைச் செயல்வழியில்  சொல்லி இருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள்.

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஒன்றியம் ஆர்.புதுப்பட்டணம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், வள்ளி சுப்பிரமணியர் ஆலயத்தின் குட முழுக்கு இன்று (21/02/2022) நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தடபுடலாகச் செய்து கொண்டிருக்கும் போது கோபாலபட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமத்தினர், இணைந்து குடமுழுக்கு வரவேற்பு பதாகைகள், நுழைவாயில்களை அமைத்து அசத்தினர்.

 

சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் தட்டுத் தாம்பூலத்துடன் கிராம மக்கள் சீர் கொண்டு வந்தனர். அதே போல இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர் நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க  சித்திவிநாயகர் குடமுழுக்கு சீர் கொண்டு வந்தனர். விழாக் குழுவினர் மொத்தமாக நின்று இஸ்லாமியச் சகோதரர்களை வரவேற்று மரியாதை செய்தனர். தொடர்ந்து தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாகம் தீர்த்தனர்.

 

"எங்களுக்குள் ஓடுவது ஒரே ரத்தம் தான் எந்த வேற்றுமையும் இல்லை. சகோதரர்கள் நாங்கள்.. எங்கள் ஒற்றுமை எப்போதும் நீடித்திருக்கும்" என்கின்றனர் குடமுழுக்கில் பங்கேற்றவர்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.