Skip to main content

திருட்டை தட்டிக்கேட்டதால் அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்... சென்னையில் பரபரப்பு!!

Published on 06/09/2020 | Edited on 06/09/2020
Vehicles smashed due to theft...

 

பைக் திருட்டைத் தட்டிக்கேட்டதற்கு வாகனங்களை ஒரு கும்பல் போதையில் அடித்து நொறுக்கியது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சூளை கண்ணப்பர் திடல் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் நடக்கும் வாகன திருட்டு மற்றும் பெட்ரோல் திருட்டு ஆகியவற்றை செய்துவந்த சிலரை ஏரியாவுக்குள் வரக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தாவூத், நந்து, ரிச்சர்ட், மணி ஆகிய 4 பேரும் சூளை ரவுண்டானா பகுதிக்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோக்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அனைவரும் தப்பித்து ஓட, நந்து, ரிச்சர்ட் ஆகிய இருவரையும் இது தொடர்பாக கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய தாவூத், மணி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்