Skip to main content

வாஜ்பாய் மறைவு;தமிழகம் புதுவைக்கு நாளை அரசு விடுமுறை அறிவிப்பு !!

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
tn  govt

 

 

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவால் தமிழகம் மற்றும் புதுவைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் 22-ஆம் தேதிவரை 7 நாட்களுக்கு துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 7 நாட்களும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்