Skip to main content

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Vaikunda Ekadasi: Paramapatha gate opens at Srirangam temple

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில், ரத்தினங்கி பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (14.12.2021) அதிகாலை 4:44 மணிக்கு, ‘ரெங்கா ரெங்கா கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் ஸ்ரீ நம்பெருமாள் பரமபத வாசலைக் கடந்தார்.

 

முன்னதாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதியிலிருந்து பகல் பத்து விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலஸ்தானத்திலிருந்து அர்ஜுன மண்டபத்திற்கு வந்தடைந்து காட்சி அளித்தார்.

 

Vaikunda Ekadasi: Paramapatha gate opens at Srirangam temple

 

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சொர்க்கவாசல் திறப்புக்குப் பின்னர் பக்தர்களைத் தனிமனித இடைவெளியுடன் கோயிலின் உள்ளே அனுமதித்தனர். அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் கோயில் நுழைவாயிலிலிருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதன் மூலமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா என்பதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சொர்க்கவாசல் திருவிழாவிற்காக வரும் பக்தர்களின் தேவைக்காக காவல் உதவி மையமும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்காக கோவில் வளாகத்தின் உட்புறப் பகுதியில் 117 சிசிடிவி கேமராக்களும், கோயில் வெளிப்புறப் பகுதியில் 90 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

 

மேலும், 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பின்போது தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இனி கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது” - கிராம மக்கள் உறுதிமொழி

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Villagers pledge against illicit liquor in presence of Collector

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் நேற்று(21.06.2024) இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Villagers pledge against illicit liquor in presence of Collector

அந்த ஆயவின் போது சிக்கிய 250 லிட்டர்  கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறினர். அதன்பின்னர், அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது; அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Next Story

திருச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Enthusiastic reception for Edappadi Palaniswami in Trichy

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி வந்தடைந்த அவருக்கு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவினர் செண்டை மேள தாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதில், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி குமார், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயுர மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்கள் வழங்கியும சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்னவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து. சாலை வழிப் பயணமாக புறப்பட்டுச் சென்ற எடப்பாடி.பழனிசாமிக்கு, தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஜெயபால் இல்ல வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் இன்று மாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வநதடைந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.