Skip to main content

இளைஞர்கள் படுகொலை; காதல் விவகாரத்தில் உறவினர்கள் வெறிச்செயல்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Two youths were passed away in a love affair

 

காதல் விவகாரத்தில் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இருவரது உடல்களை கொலையாளிகள் துறையூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாலங்களுக்கு கீழே வீசிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல் ஜம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் உள்ள ராயனேரி ஓடப் பாலத்தின் அடியில் இதே முறையில் சுமார் 45 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயுடன் இறந்து கிடப்பது கண்டுபிடித்து இரண்டு உடல்களையும் மீட்ட போலீசார் துறையூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுமதித்து இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் துறையூர் அருகே இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு பகுதியில் உள்ள நெடுவகோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் என்பவரது மகன் பிரபு (42) என்பதும், ஜம்பனாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்து கிடந்தவர் இளங்கோவன் மகன் ஸ்டாலின் என்பதும் அவரும் நெடுவகோட்டைப் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் ரத்த கரையை கண்டுபிடித்தனர். அப்பொழுதுதான் துறையூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த இருவரையும் ஒரத்தநாடு பகுதியில் கொலை செய்து துறையூர் பகுதியில் குற்றவாளிகள் வீசி சென்றது தெரிய வந்தது.

 

இதனையடுத்து, ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஹரி(22), சூர்யா(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், பிரபு என்பவர் கார் ஓட்டுநர் என்பதும், திருமணம் செய்து விவகாரத்து ஆகி தனியாக வசித்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் பிரபுவைக் கண்டித்ததாகவும் தெரிகிறது. ஆனால் பெண்ணின் நட்பை பிரபு விட மறுத்துள்ளார். இந்த நிலையில்தான் பிரபுவையும் அவரது நண்பர் ஸ்டாலினையும் பெண்ணின் உறவினர்கள் லாவகமாக கூட்டிச் சென்று தஞ்சாவூர் பகுதியில் கொலை செய்து, பிணத்தை திருச்சி மாவட்டம் துறையூரில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. காதல் விவகாரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தஞ்சாவூர் - துறையூர் கொத்தம்பட்டி , பொன்னுசங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கிடையே உள்ள காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து போலீசார் ஆகியவற்றை மீறி கொலையானவர்களின் உடல்களைக் குற்றவாளிகள் எடுத்துச் சென்றது எப்படி என துறையூர் பகுதி மக்கள் வியப்பில் அதிர்ச்சியிலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.