Skip to main content

டிடிவி கட்சியை அழித்து விட்டார்! தங்கதமிழ்செல்வன்  பகீர் பேட்டி!!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் டிடிவி தீவிர ஆதரவாளராகவும் இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென  திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். அதன்பின் தங்க தமிழ்ச்செல்வன் தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக தேனியில்  ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைந்தார். அதன்பின் தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட அளவில் பதவி கிடைக்கும் என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின்  தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட பொருப்பை விட மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை
கொடுத்தார்.
 

thanga tamil selvan

 

 

இந்த நிலையில் தான் தேனி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கட்சிக்காரர்கள் பலர் ஆளும் கட்சியான அதிமுகவிலும் எதிர்க் கட்சியான திமுகவிலும் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் டிடிவி யின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி திடீரென டிடிவி-க்கு எதிராக  கூட்டங்களை போட்டுக்கொண்டு வருகிறவர் கூடிய விரைவில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திக்க இருக்கிறார் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்து வருகிறது.

இதுசம்பந்தமாக  திமுக  கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது..... டிடிவி பெரிய ஒரு அரசியல் தலைவர் போல் இமேஜை வளர்த்துக்கொண்டு செயல்பட்டாரே தவிர, கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. தன்னுடன் இருக்கும் இரண்டு ஜால்ராக்களின்  பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருவதின் மூலமே கட்சியும்  மாநில அளவில் அழிந்து வருகிறது. அதுபோல் பொறுப்புகளில் இருக்கும் கட்சிக்காரர்களை மதிப்ப தில்லை அதனால்தான்  தற்பொழுது புகழேந்தி கூட  டிடிவி-க்கு எதிராக  பேசிக்கொண்டு மாற்றுக் கட்சிக்கு போவதாக  எனக்கும் தகவல் வந்தது.  அதுபோலவே  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருக்க கூடிய  பொறுப்பாளர்கள் தொண்டர்கள் டிடிவி-க்கு எதிராக மாற்று கட்சிகளுக்கு தான்  போய் வருகிறார்கள்  அதில்  பெரும்பாலானோர்  திமுக பக்கம்   தான் வருகிறார்கள் இந்த நிலை தொடருமானால் அந்தம்மா ஜெயிலிலிருந்து வருவதிற்குல்லையே தமிழகத்தின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறவே இருக்காது. வெறும் பெயரை மட்டும் தான் அந்த அம்மாவிடம் டிடிவி சொல்ல முடியும் அந்த அளவுக்கு தன்னுடைய ஆணவத்தின் மூலமே கட்சியை அளித்து விட்டார். அவரை நம்பி வந்தவர்களையும் ஏமாற்றி விட்டார் என்பது தான் உண்மை!

 

 

சார்ந்த செய்திகள்