Skip to main content

மனைவி அழுகிய நிலையில் வாய்காலில் கிடப்பது தெரியாமல் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய போலிஸ்காரர் ! 

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
drain



திருச்சி உய்யகொண்டான் திருமலை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் வடக்கு கரைப்பகுதியில் கடந்த 1ம் தேதி இரவு அழுகிய நிலையில் பெண் செடி, கொடிகளுக்கு இடையே கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதியினர் உறையூர் போலிசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியாமல் போலிசார் குழம்பி போய் இருந்தனர். அந்த பகுதியில் காணமல் போனவர் பட்டியலை வைத்து போலிசார் விசாரணையை துவங்கினர். இந்த நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரின் முழுவதும் உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அவருடைய கணவர் ராஜசேகரன் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. ராஜசேகர் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் புதுக்கோட்டையில் எஸ்.ஐ.யாக வேலை செய்து வருகிறார். 


ஜெகதீஸ்வரி தான் வாய்காலில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்தில் சுமார் 15 பவுன் நகை அப்படியே இருந்தால் இது நகைக்காக நடைபெற்ற கொலை இல்லை என்பதை உறுதி செய்தனர் விசாரணை அதிகாரிகள். கோவிலுக்கு செல்லும் போது வாய்காலில் கால் வழுக்கி கீழே விழுந்தி மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்கிற ரீதியில் போலிஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. 


மனநிலை பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரி கோவிலுக்கு செல்வதாக சொல்லி சென்றவர் காணமால் போனதால் அவருடைய கணவர் ராஜசேகர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காமல் ஜெகதீஸ்வரியை பார்த்தால் தனக்கு தெரிவிக்கும் படி அவருடைய புகைப்படம் ஒட்டிய போஸ்டர்கள் ஒட்டினார். மனைவி வாய்காலில் அழுகி கிடப்பது தெரியாமல் போஸ்டர் ஒட்டிய போலிஸ்காரர் தன் மனைவியின் உடலை பார்த்ததும் கதறி அழுதார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.