Skip to main content

கோஷ்டி சண்டையில் அ.தி.மு.க. திருச்சி எம்.பி. தொகுதியை பறிகொடுத்த கதை! 

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

 

தமிழகத்தின் இதய பகுதி என்று வர்ணிக்கப்படும் திருச்சி அனைத்து இன மக்களும் ஒற்றுமைக்கு இலக்கணமான ஊர் என்று அனைவரும் அறிந்ததே. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் திருப்பு முனை அரசியலுக்கு திருச்சியையே தேர்ந்தெடுப்பார்கள்.. அ.தி.மு.க. அரசியல் வரலாற்றில் திருச்சியை அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. ஆனால் ஜெ.வுக்கு ஸ்ரீரங்கம் பூர்வீகம் என்பதால் திருச்சி ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்பட்டது. எம்.பி. தொகுதியை பொறுத்த வரையில் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், பிஜேபி மட்டுமே தொடர்ச்சியாக வெற்றிபெற்றது. 

 

k

 

தி.மு.க. தஞ்சாவூர் கள்ளர் எல்.ஜியை களத்தில் இறக்கி வெற்றிபெற வைத்தது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு சசிகலா இளவரசியின் சம்மந்தி திருச்சி கலியபெருமாள் திருச்சியில் தங்கள் சமூகத்தில் ஒரு எம்.பி. வேண்டும் என்று ப.குமாரை அ.திமுக வேட்பாளராக நிறுத்தி தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற வைத்தனர். அ.தி.மு.க. எம்.பி.குமாருக்கு முன்பு எல்.ஜியை தவிர அனைவரும் மைனாராட்டி வகுப்பை சேர்ந்தவர்களே வெற்றிபெற்றிருந்தனர். 

 

இந்த நிலையில் அ.தி.மு.க. மா.செ.வாக இருந்த வெல்லமண்டி நடராஜன் உடல்நலக்குறைவால் மா.செ. பதவியை வேண்டாம் என்று சொல்ல ப.குமாருக்கு கூடுதலாக இந்த பதவியும் சேர்ந்து கொண்டதால் குமாரின் அதிரடி அரசியலில் அதிர்ச்சியடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். – துணைக்கு அமைச்சர் வளர்மதியை அழைத்துக்கொண்டு தொடர்ச்சியாக முதல்வரிடம் சுமார் 25 முறைக்கு புகார் கொடுத்து கொண்டே இருந்தார். அதன் விளைவாக இதுவரை மறைமுகமாக இருந்த கோஷ்டி பிரச்சனை நேரடியாக களத்தில் தெரிய ஆரம்பித்தது. வெளிப்படையாக கட்சியினர் இரண்டு பிரிவுகளாக பிரிய ஆரம்பித்தனர். 

 

v

 

இந்த இரண்டு பேரின் வெளிப்படையான சண்டையினால் மா.செ. குமார் புதிய நிர்வாகிகள் பதவி போட்டு எழுதி கொடுத்த பட்டியல் கடந்த வருடமாக அப்படியே நிலுவையில் இருக்கிறது. இதனால் கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமலே இருப்பது கட்சி தொண்டர்கள் இடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

 

இதனால் திருச்சி கட்சியே இரண்டாக செயல்பட ஆரம்பித்தது. இதே நிலை தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் – கார்த்திக்தொண்டைமான் – ஓ.பி.எஸ். அணி என இரண்டு பெரிய கோஷ்யாக உருவெடுக்க ஆரம்பித்தது. தற்போது அடிதடி சண்டை வரை கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறது. 

 

இப்படி திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்ட அ.தி.மு.க.விலும் தலைதூக்கி நிற்கும் கோஷ்டி பூசல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரை நிறுத்தினாலும் பெரிய சிக்கல் ஏற்படும் என்று உளவுத்துறை கொடுத்த சர்வே அடிப்படையில் அ.தி.மு.க. திருச்சி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்து பிஜேபி பக்கம் சாய்த்து விட்டது. தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்ற அதிமுக மா.செ. குமாரும் சீட்டு கொடுத்தால் நிற்கிறேன். இல்லை என்றால் அடுத்த வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆகிற மனநிலையில் இருக்கும் போது தான். அ.தி.மு.க. தலைமைய திருச்சி எம்.பி. தொகுதியை பிஜேபியிடம் ஒப்படைத்தது. இவ்வளவு பெரிய கோஷ்டி பிரச்சனையில் பிஜேபி யாரை நிறுத்தினாலும் கட்டயா தோல்வி என்பதை உணர்ந்த பிஜேபி அதை வலுக்கட்டாயாக தே.மு.தி.க.விடம் தள்ளிவிட்டது. தே,மு.தி.க. வோ போட்டியிட வேட்பாளர் இல்லாமல் தடுமாறி வெளியூரில் இருந்து தர்மபுரி மருத்துவர் இளங்கோவன் என்பவரை கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்கள். 

 

தொடர் வெற்றியாக தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியை அ.தி.மு.க. நிர்வாகிகளின் கோஷ்டி சண்டையில் திருச்சி தொகுதியை பறி கொடுத்து நிற்கிறது அ.தி.மு.க. இந்த மாதிரியான நேரங்களில் தான் ஜெயலலிதா போன்ற அதிகாரம் மிக்க கட்சி தலைமை இல்லை என்பதை அப்பட்டமாக உணர்கிறோம் என்கிறார்கள் கட்சியில் உள்ள தீவிரமான சீனியர் தொண்டர்கள். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'இதுவரை முதல்வர் அங்கு போவாதது ஏன்?' - தமிழிசை கேள்வி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'Why hasn't the Chief Minister gone there yet?'-Tamizhisai question

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழக ஆளுநரை தமிழக பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் இன்று சந்தித்தோம். சில கோரிக்கைகளை வைத்தோம். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த விஷச்சாராயத்தினால் மக்கள் இறந்து கொண்டிருப்பதும், பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசு அதை இட்டுச் செல்கின்ற முறையும் சரியாக இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசைக் தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.

அதேபோல் அங்கே சிகிச்சை பெற்று வருபவர்களில் பலபேர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். பலபேர் இன்னும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் சிலர் அனுப்பப்பட்டுள்ளார்கள். எந்த மருத்துவமனையில் யார் சிகிச்சை பெறுவது என்பதில் கூட குழப்பம் நிலவி இருக்கிறது. புதன்கிழமை தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமையே அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறிவிட்டது. அதோடு மட்டுமல்லாது அடுத்த நாள் கலெக்டரோடு திமுகவை சேர்ந்த எம்எல்ஏவும் உட்கார்ந்து இதை மறைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு அமர்ந்து பொய் சொன்ன எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த பாரபட்சம் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல அவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் அந்தத் துறையின் அமைச்சரோ, முதலமைச்சரோ அங்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு தமிழகத்தில் உள்ள மக்களை மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.  ஜனநாயக நாட்டில் ஒரு குற்றம், ஒரு பிரச்சனை மாநிலத்தில் நடந்தது என்றால் அதைக் கண்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது அவர்களை போராடக்கூட  அனுமதிக்கவில்லை'' என்றார்.