Skip to main content

தமிழகத்தில் 4.5 லட்சத்தை நெருங்கும் கரோனா! ஒரேநாளில் கோவையில் அதிகபட்ச தொற்று உறுதி!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இன்று மேலும் 5,892 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,855 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,861 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 52,070 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 968 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,38,724 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 80,864 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,110  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,86,173 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 92பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,608 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை  2,814 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் ஒரேநாளில் 4,924 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில், அதிகபட்சமாக கோவையில் 593 பேருக்கும், கடலூரில் 590 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்