Skip to main content

கால் போன போக்கில் சென்ற சிறுமி... ஐ.எம்.இ.ஐ எண் உதவியால் சிக்கிய மூவர்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Three trapped with the help of IMEI number

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது வீட்டில் கோபித்துக்கொண்டு கால்போன போக்கில் நடந்து சென்றுள்ளார். கீழ் ஆதனூர் என்ற ஊர் அருகே சிறுமி நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அப்போது சிறுமி தன்னை திண்டிவனம் கொண்டுபோய் இறக்கி விடுமாறு கூறி உள்ளார். சரி உன்னை திண்டிவனத்தில் கட்டாயம் இறக்கி விடுகிறேன் என்று கூறிய ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் சிறுமியை ஏற்றிக்கொண்டு எங்கும் நிற்காமல் மதுராந்தகம் அழைத்துச் சென்றுள்ளார்.

 

இதனிடையே சிறுமியின் பெற்றோர் தங்களது மகள் கோபித்துக் கொண்டு விட்டு சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவரது புகாரின்பேரில் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமி வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுமியின் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணை போலீசார் மேலும் ஆய்வு செய்தனர.  சிறுமியின் செல்லில் வேறு ஒரு நபர் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் செல்போன் மூலம் செங்கல்பட்டு அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் 3 பேர் சிறுமியை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை அடைத்து வைத்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திருக்கழுக்குன்றம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த போலி சாமியாரான தேவன் என்பவரது 32 வயது மகன் என்பதும் இவர் கடந்த 13ஆம் தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் போலிச்சாமியார் எல்லப்பன் சிறுமியை கடத்திச்சென்று மதுராந்தகம் அருகில் உள்ள சிறு பேர் பாண்டி என்ற கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் பிரபு(33) வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. சிறுமியை போலீசார் தேடுவதை அறிந்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் புவனேஷ்வரி நகர் சின்னப்பன் அங்குள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

 

இதனை அடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்ததற்காக போலி சாமியார் எல்லப்பன், அவருக்கு உடந்தையாக இருந்ததாக பிரபு, சின்ன பையன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியை கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திண்டிவனம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.