Skip to main content

சிந்தனைக்குரிய மொழி தமிழ்மொழி! -லதா சரவணன் நூல் வெளியீட்டில் கொடைக்கானல் காந்தி முழக்கம்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

எழுத்தாளர் லதா சரவணனின் ஐந்து குறுநாவல்கள் நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்தது. 

சோனியா ஹெலன் கணீர்க் குரலில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நூலை நேசம் பதிப்பக உரிமையாளர் கலைமாமணி பாண்டிச்செல்வன் வெளியிட, முதற்படிகளை லதா சரவணனின் பெற்றோர் பெற்றுக் கொண்டனர். அடுத்தடுத்த படிகளை எழுத்தாளர் லதா, கவிஞர்  ஜானு இந்து ஆகியோர்  பெற்றுக் கொண்டனர். 

 

Thoughtful language Tamil! Kodaikanal Gandhi in Lata Saravanan book release function

 

விழாவிற்குத் தலைமை தாங்கிய  கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், ”ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் நசுக்கப்பட்டவர்களுக்காகவும் கவலைப்பட்டுக் குரல் கொடுக்கும் எழுத்தே சிறந்த எழுத்து. அந்த வகையில் அடித்தட்டு மக்களுக்காகவும் திருநங்கையருக்காகவும் பரிந்துபேசும்  லதா சரவணனின் எழுத்து, மனித ஈரம் கசியும் எழுத்தாகும். அவர் இதயத்தால் எழுதுகிறவர். அவரது குறுநாவல்கள் மனிதத்தைப் பேசுகின்றன. பெண்ணியம் பேசுகிற சிலர்  கண்ணியம் மீறுகின்றனர்’ என்று சுட்டிக்காட்டினார்.

 

Thoughtful language Tamil! Kodaikanal Gandhi in Lata Saravanan book release function

 

கவிஞர் நாஞ்சில் இன்பாவோ ‘பெண் விடுதலை என்ற பெயரில் இன்று சில பெண் கவிஞர்கள் ஆபாசச் சொற்களைக் கேவலமாகக் கையாளுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் புறக்கணிக்கவேண்டும். எப்படி எழுதவேண்டும் என்பதற்கு லதா சரவணன் உயர்ந்த உதாரணம்’ என்றார் அழுத்தமாக. 

சிந்தனையாளர் கொடைக்கானல் காந்தியோ ‘தமிழ்  மொழி சிந்தனையாளர்களின் மொழி. வள்ளுவன், பூங்குன்றன் தொடங்கி எல்லோரும் சிந்தனையால் தமிழை உயர்த்தினார்கள். லதா சரவணனின் எழுத்தும் சிந்தனையைத் தூண்டும் உயர்ந்த எழுத்துக்களாக இருக்கின்றன. அவரை முதன் முதலில் பார்த்தபோதே, அவரிடம் மகத்தான ஏதோ ஒன்று இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அது மனித நேயமிக்க எழுத்து என்பதைக் கண்டுகொண்டேன்’ என்று அவையைக் கலகலப்பாக்கினார். 

எழுத்தாளர் கமலக்கண்ணன் ‘லதா சரவணனின் உழைப்பு மகத்தானது. அவரது நூல் கலைவடிவம் பெற்று சிறப்பாக மிளிர்கிறது. சாதனைகளால் வியக்க வைக்கிறவர் லதா சரவணன்’ என்று பாராட்டினார்.

 

Thoughtful language Tamil! Kodaikanal Gandhi in Lata Saravanan book release function

 

’வடசென்னைக்கு என்று பெரும் சிறப்பு இருக்கிறது. அதில் ஒன்று லதா சரவணன். அவர் எழுத்து வாழ்க்கையை போதிக்கிறது’ என்று மகிழ்வை வெளிப்படுத்தினார்.

முனைவர் பாட்டழகனும், லதா சரவணனின் எழுத்துக்களைப் பாராட்டிப் பேசினார்.  ”இந்த விழாவைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே இது நம் விழா  என்ற எண்ணம் எனக்குள் தோன்றிவிட்டது. அந்த உணர்வோடு  லதா சரவணனைப் பாராட்ட வந்தேன்’ என்றார் எழுத்தாளர் லதா.

விரைவில் வெளியாக இருக்கும்  ’மின் கைத்தடி’ இதழையும் எதிர்பார்ப்போடு அனைவரும் பாராட்டினார். விழாவின் இடையில் அரங்கேறிய லதா சரவணனின் மகள்கள், தங்கள் திடீர் நடனத்தின் மூலம் அரங்கை உற்சாகமாக்கினர்.  ஏற்புரையாற்றிய லதா சரவணன் தன் எழுத்து அனுபவங்களைச் சொன்னதோடு, அப்பா, அம்மா, கணவர், தங்கை, அண்ணி, குழந்தைகள் என சகலரும் தனக்குப் பக்க பலமாக இருப்பதை விவரித்தார். 

பரத மாணவிகளுக்கு விழாக் குழுவினர்  முனைவர் நளினிதேவி  பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். விழாவில் கவிஞர்கள் பெருமாள் ஆச்சியும், அமுதா தமிழ்நாடனும் சிறப்பிக்கப்பட்டனர். மதுரை ’அரிமா’ கார்த்திகேயன், விமலா கார்த்திகேயன், கவிஞர் ஜானு இந்து, காவியா உள்ளிட்ட பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். கவித்துவமாக அரங்கேறிய விழா, மனதை இதமாக்கியது.

                                                                                                                  -சூர்யா 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்