Skip to main content

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி காலமானார்!

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

thoothukudi district congress party former MLA

 

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. (காங்கிரஸ்) ஓ.எஸ்.வேலுச்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

 

88 வயதான ஓ.எஸ்.வேலுச்சாமி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1977- ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, 1980- ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, அதில் ஓ.எஸ்.வேலுச்சாமி தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். மேலும், கோவில்பட்டி காந்தி மண்டபம் அறக்கட்டளையின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்