Skip to main content

கனமழையால் சுவர் இடிந்து விபத்து... 8 வயது சிறுவன் உட்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கிய சோகம் ...

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

பக்கத்துவீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசை வீட்டில் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

thiruvarur house accident

 

 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செல்லூர் கிராமத்தைச்சேர்ந்தவர்  கலியபெருமாள். இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு மிகவும் பழமையானது. ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக இந்த ஓட்டுவீடு மிகவும் சேதமடைந்தது.

இந்நிலையில் இன்று மாலை திடீரென அந்த வீட்டில் ஒரு பக்க சுவர் சரிந்து பக்கத்தில் உள்ள கூரை வீட்டின் மேல் விழுந்தது. அப்போது அருகில் இருந்த கூரைவீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த ஆறுமுகம் வயது 65, ஆறுமுகத்தின் மனைவி அஞ்சம்மாள் வயது 48, உறவினர் சங்கீதா வயது 27,
சங்கீதாவின் 8 வயது மகன் பாலமுருகன் உள்ளிட்டோர் சுவர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் அவர்களை காப்பாற்ற சென்ற கலியபெருமாளுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக எதிரெதிர் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளிலிருந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தின் மனைவி அஞ்சம்மாள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காயமடைந்த அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளான அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.