Skip to main content

'சசிகலாவின் பலம் அவர்களுக்குத் தெரியும்' - அதிமுக, அமமுக இணைப்பு குறித்து சி.டி.ரவி பேட்டி! 

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

Sasikala's strength ... CT Ravi press meet

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணியில் தற்போது வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

 

அதிமுக - பாஜக இடையே நான்காம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி, தேர்தல் பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ''சசிகலாவின் பலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் தெரியும். சசிகலா, தினகரன் ஆகிய இரண்டு பேரையும் இணைப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நல்லமுறையில் சென்று வருகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்