Skip to main content

விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

nn

 

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கள்ளக்குறிச்சியுடன் சேர்த்து ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வந்து கட்டடங்களின் நிலைத்தன்மை, சுகாதாரத்தின்  தரம், கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்