Skip to main content

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? - இரண்டாவது நாளாக கருத்துக் கேட்பு!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

tamilnadu schools opening parents suggestion collecting the schools

 

தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் இரண்டாவது நாளாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

 

2020 - 21 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தலாமா? என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொங்கல் விடுமுறைக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்று அந்தந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்க அரசு முடிவுசெய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. 

tamilnadu schools opening parents suggestion collecting the schools

 

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (07/01/2021) கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களின் பெற்றோர்களிடம் வாட்ஸ் ஆப் மற்றும் இணைய வழியில் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. 

 

இன்று மாலை வரை பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பெற்றோர்கள் அளித்துள்ள கருத்துகளைப் பள்ளிகள் வழங்கும். அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறைக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் பெற்றோர்களின் கருத்துக்களை அனுப்புவர். அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆலோசனை செய்து, பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.