Skip to main content

'குரூப் 4 பணி- சான்றிதழ் விவரங்களை பதிவிட வேண்டும்'- டிஎன்பிஎஸ்சி!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப்- 4 உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்வி சான்றிதழ் விவரத்தை பதிவு செய்ய தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. 
 

tamilnadu public service commission exam circular examiner instruction

மேலும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்ட அரசு இ- சேவை மையங்கள் மூலம்  டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சான்றிதழ் விவரங்களை பதிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு  www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 

சார்ந்த செய்திகள்