Skip to main content

ரூபாய் 9,000 கோடி தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த 40 பேரில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் குணமடைந்துள்ளனர். 

tamilnadu cm palanisamy write letter for pm narendra modi

இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணி மற்றும் கரோனா பாதிப்புக்களை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூபாய் 9,000 கோடி நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

ரூபாய் 4,000 கோடி வழங்குமாறு ஏற்கனவே கோரியிருந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்