Skip to main content

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 105 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 105 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் மற்றும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி அவ்வாறு மாற்றப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேலானதை அடுத்து, ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிக்களில் சிலர் முன்பு பணியாற்றிய அதே மாவட்டத்திற்கும், பலர் புதிய பணியிடங்களுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.  இன்னும் சிலர் சொந்த மாவட்டத்திற்கு பக்கத்து மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.



சேலம் மாவட்டத்தில் ஓமலூர் சப்டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் டி.சரவணன் சேலம் மாநகர வடக்கு சரக உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி சப்டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.பாஸ்கரன் மீண்டும் ஓமலூர் டிஎஸ்பியாக மாற்றப்பட்டு உள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.அசோக்குமார், மாவட்ட மது ஒழிப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த இடம் ஏற்கனவே காலியாக இருந்தது. 

 

tamilnadu all districts dsp police tranfer dgp tripathy


 


சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.சண்முகையா, சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வரும் உதவி கமிஷனர் கலைசெல்வன், சென்னை பெருநகர ஆணையரக மக்கள் தொடர்பு அலுவலக உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

 

tamilnadu all districts dsp police tranfer dgp tripathy

 


சேலம் மாவட்ட ரூரல் சப்டிவிஷன் சங்கரநாராயணன், சென்னை பெருநகர செயின்ட் மவுன்ட் சரக உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வரும் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், சென்னை பெருநகர மதுவிலக்குப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். சேலம் மாநகர மேற்கு சரக உதவி கமிஷனர் எஸ்.சேகர், ஈரோடு மாவட்டம் பவானி சப்டிவிஷனுக்கு மாற்றப்பட்டு உள்ளார். 


 

tamilnadu all districts dsp police tranfer dgp tripathy

 


நீலகிரி மாவட்டம் ஊட்டி சப்டிவிஷன் டிஎஸ்பி பி.எம்.தங்கவேல், சேலம் மாவட்டம் சங்ககிரி சப்டிவிஷனுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தர்மபுரி மாவட்ட கியூ பிரிவு டிஎஸ்பி ஹயாத், கோவை மாவட்ட டான்ஜெட்கோ விஜிலன்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவர்கள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 105 டிஎஸ்பி / உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.