Skip to main content

திடீரென தீப்பிடித்தது வீடுகள் எரிந்து நாசம்!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Sudden fires destroy houses!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நயினார் குப்பம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின் கூரை வீடு நேற்று காலை திடீரென  தீப்பிடித்து எரிந்தது. இவர் வீட்டில் பிடித்த தீ, காற்றில் வேகமாக பரவி அருகில் உள்ள கனகவல்லி, மணிகண்டன் மற்றும் சிலரது வீடுகளுக்கும் பரவியது. 


எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருந்து 2 கேஸ் சிலிண்டர்கள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதனால் மேலும் தீ பரவியதையடுத்து வெங்கடேசன், ராசு ஆகியோரது வீடுகளும் தீக்கிரையானது. உடனடியாக அப்பகுதி மக்கள், வீடுகள் தீப்பற்றி எரியும் தகவலை உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். 


தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி, திருநாவலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஐயப்பன் ஆகியோர் தலைமையில் மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எரிந்த வீடுகளில் சுமார் பல லட்சம் மதிப்பிலான துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது. 


இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக யாருக்கும் தெரியாமல் தீ வைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.