Skip to main content

“கை கழுவுங்கள், நீண்ட காலம் வாழுங்கள்” -விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களின் பிரமாண்ட முயற்சி..! (படங்கள்)

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

 

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியிலும் மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
 

நிகழ்ச்சியின் போது சோப்பு போட்டு கை கழுவுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 10,000 சதுர அடி பரப்பில் 25,000 சோப்புகளைப் பயன்படுத்தி கை கழுவுதல் போன்ற பிரமாண்ட வடிவத்தையும், கை கழுவுங்கள் நீண்டகாலம் வாழுங்கள் என்ற வாசகத்தையும் மாணவர்கள் அமைத்தனர்.  மேலும், அந்த அமைப்பைச் சுற்றி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு வாசகங்களுடன் நின்று கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
students and public are suffering due to impact of traffic due to weekly market

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தை மைதானத்தில் கடந்த ஓராண்டு காலமாக புணரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் சந்தையின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. நாள் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இந்தச் சாலையில் ஒவ்வொரு வாரமும் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு வாரமும் நெரிசல் இருந்தாலும் மக்கள் சகித்துக்கொண்டனர். இந்த வாரம் மக்களிடம் இது கோபத்தை உருவாக்கியுள்ளது. காரணம், இந்த வாரம் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டது. மாணவ - மாணவிகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் நேரத்தோடு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பால் மாணவ - மாணவிகள் அதில் சிக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் எனப் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக அவதி அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கட்டுமானம் முடியும் வரை காவல்துறை போக்குவரத்து பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மாணவர்களுக்குப் பாரம்பரிய விளையாட்டுப் பொருட்களை வழங்கிய அரசுப் பள்ளி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Government school provided traditional sports equipment to students

சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரை ஓரத்தில் திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமம் கொள்ளிடக்கரை ஓரமாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்தக் கிராமம் மழை நீரால் சூழப்பட்டு பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் இவர்களின் குடியிருப்புக்கு செல்லும் வகையில் அரசு ரூ20 கோடி செலவில் மேல்மட்ட பாலம் அமைத்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் கீழகுண்டலபாடி கிராமத்தில் உள்ள பெ.ராசப்பா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இதில் மொத்தம் 81 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். தற்போது பள்ளி திறந்துள்ள நிலையில் உடல் நலத்தை பேணி காக்கும் வகையிலும் அறிவு திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாடாமல்லி தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் சிவராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சீர்காழி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யாமினி அழகு மலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேரம் போர்டு, பல்லாங்குழி, ஸ்கிப்பிங், பரமபதம், ரிங் பால், பில்டிங் வடிவமைப்பு, பிசினஸ் கார்டு, தாயம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை  மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும் இந்தப் பள்ளிக்கு தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டுதல், மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச், டேபிள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி, நூலக அறை,  கழிவறை புனரமைப்பு மாணவர்களுக்கு சீருடை மற்றும் உணவு அருந்துவதற்கு எவர் சில்வர் தட்டு உள்ளிட்ட பல்வேறு விதமான அடிப்படை உதவிகளை இவர் அவர்களின் நண்பர்கள் உதவியை பெற்று செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டும் விதமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் செயலாளர், பள்ளி ஆசிரியைகள்  சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியைகள் ஜெயசித்ரா, புஷ்பா, சங்கீதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.