Skip to main content

சுப்பிரமணியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்!!

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

stalin

 

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை திருச்சியிலிருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து ஓட்டப்பிடாரம் தொகுதியில் கூட்டுடன்காடு ஊராட்சியில் இன்று கிராம் சபை கூட்டம் நடந்தது. அதில் கிராம மக்களையும் பூத் கமிட்டி முகவர்களையும் சந்தித்து பேசினார். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.  

 

stalin

 

பின்னர் அங்கிருந்து தீவிரவாதிகளின் தாக்குதலால் பலியான சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் சவலாப்பேரி கிராமத்திற்கு சென்றார். அங்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். பின்னர் அவரது மனைவி மற்றும் அவரது பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார். அதையடுத்து திமுக சார்பிலான நிதி உதவி இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார்.

 

ஸ்டாலினுடன் கனிமொழி,கருப்பசாமி பாண்டியன்,எம்.எல்.ஏ கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன்சென்றிருந்தனர்.      

 

 

 

சார்ந்த செய்திகள்