Skip to main content

மோடி ஆட்சியை போல் எடப்பாடி ஆட்சியை குளோஸ் செய்துவிட வேண்டும் - ஸ்டாலின் பேச்சு

Published on 08/05/2019 | Edited on 14/05/2019

கரூர் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜிக்காக திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு நாள் முகாமிட்டு அந்த தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளார். 

 

STALIN SPEECH IN AVARAKURICHI CONSTITUENCY

 

4 கிலோமீட்டர் கடைவீதிகளில் நடைபயணமாக சென்று பிரச்சாரம் செய்தார். முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் பள்ளப்பட்டி பகுதியில் அவர் பிரச்சாரத்திற்கு நடைபயணமாக சென்ற போது முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக நின்று அவரை வரவேற்றனர். சிலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முஸ்லீம் பெண்களும் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். இது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. கடைவீதியில் பெண்கள் ஸ்டாலினுக்கு மாம்பழம், வாழைப்பழம் என்று கொடுத்து மகிழ்ந்தனர். 

 

 

வேலாயுபாளையம் பூஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் பிரச்சாரத்தில் பேசும் போதும் ஆளும்கட்சிகளான மத்திய மாநில அரசுகளை பொளந்து கட்டி பேசி தள்ளினார். இது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

அப்போது பேசிய திமுக. தலைவர் ஸ்டாலின் 

 

STALIN SPEECH IN AVARAKURICHI CONSTITUENCY

 

வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக உங்களை தேடி, நாடி நான் வந்திருக்கிறேன். 

 


ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நம்முடைய கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிமணிக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவை தந்து சிறப்பான வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது உண்மை தானே. அதில் சந்தேகமில்லையே. தப்பித்தவறி வேறு யாருக்கும் ஓட்டுப்போடவில்லையே. கை சின்னத்திற்கு தானே ஓட்டு போட்டீர்கள் (அப்போது அங்கிருந்தவர்கள் ஆமாம்... ஆமாம்... என சத்தம் எழுப்பினர்).

 

STALIN SPEECH IN AVARAKURICHI CONSTITUENCY

 

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் பதவியை பறித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால் முதல்-அமைச்சராக இருக்க கூடிய பழனிசாமி ஊழல் நிறைந்தவராக இருக்கிறார். லஞ்சம் வாங்குகிற முதல்-அமைச்சராக இருக்கிறார், மக்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார், எனவே அவரை மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் ஒருவர் தான் செந்தில்பாலாஜி. அதனை கொடுத்ததற்காக 18 பேரின் பதவி பறிக்கப்பட்டது. அதனால் இந்த இடைத்தேர்தல் வந்து சேர்ந்திருக்கிறது. 

 

 

செந்தில்பாலாஜி அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அந்த திட்டம் மிகவும் வரவேற்புக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைக்கள் 25,000 பேருக்கு 3 சென்ட் நிலம் கொடுக்கப்படும். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் கொண்டு செல்லப்படும் என்றார். 

 

STALIN SPEECH IN AVARAKURICHI CONSTITUENCY

 

தி.மு.க.,வுக்கு மெஜாரிட்டி: பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி; சாடிஸ்ட். புதுடில்லியில், 100 நாட்கள் போராடிய விவசாயிகளை அவர் சந்திக்கவில்லை. ஆனால், தொழிலதிபர்களை, நடிகைகளை சந்தித்தார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. கறுப்பு பணத்தை மீட்டு, 15 லட்சம் ரூபாயை ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போடுவேன் என்றார்.

 

 

அதன்படி, பணம் எதையும் போடவில்லை. அதேபோல், 18 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும், தி.மு.க., வெற்றிபெறும். தற்போது, தி.மு.க., கூட்டணிக்கு, 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அரவக்குறிச்சி உள்ளிட்ட, நான்கு சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும். அப்போது, 119 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டு, மெஜாரிட்டியுடன், தி.மு.க., ஆட்சி அமைக்கும். இதை உளவுத் துறை மூலம் தெரிந்த கொண்ட, அ.தி.மு.க., அரசு, சபாநாயகர் மூலம் மூன்று எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க திட்டமிட்டது. சபாநாயகரும், மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தி.மு.க., தரப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். தற்போது, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

STALIN SPEECH IN AVARAKURICHI CONSTITUENCY

 

அதேபோல கொட்டும் மழையில் அரியூர் பகுதியில் பேசும்போது, நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் மோடி எதிராக வாக்களித்து குளோஸ் செய்தீர்கள். அதே போல தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் செந்திபாலாஜியை வெற்றிபெற செய்தால் எடப்பாடி ஆட்சி குளோஸ் ஆகிவிடும் என பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்