Skip to main content

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

SPECIAL TRAINS TICKET BOOKING PEOPLES CHENNAI

 

 

தமிழகத்தில் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் இயக்கப்படும் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (05/09/2020) காலை 08.00 மணிக்கு தொடங்கியது.

 

ஐந்து மாதங்களுக்கு பிறகு ரயிலில் செல்லவிருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளியுடன் மக்கள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்குகின்றனர்.

 

செப்டம்பர் 7- ஆம் தேதி செல்லும் சென்னை- மேட்டுப்பாளையம், திருச்சி- நாகர்கோவில் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது. மேலும், செப்டம்பர்- 8 ஆம் தேதி முதல் செல்லும் சென்னை- கன்னியாகுமரி, செப்டம்பர் 10- ஆம் தேதி முதல் செல்லும் எழும்பூர்- செங்கோட்டை ரயில்களுக்கான முன்பதிவும்  தொடங்கியுள்ளது.

 

புதிதாக அறிவித்த 4 ரயில்களுடன் ஏற்கனவே அறிவித்த 9 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்