Skip to main content

காவலர் கன்னத்தில் அறைந்த எஸ்பி! உயரதிகாரிகளின் மிரட்டலால் புகாரை வாபஸ் பெற்றாரா?

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

SP who slapped the guard on the cheek! Did he withdraw the complaint due to intimidation by higher authorities?

 

சேலம் அருகே, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி, ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனத்தைப் பிடிக்காத காவலரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பி மீதான புகாரை வாபஸ் பெறும்படி அந்தக் காவலர் மிரட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி பாலாஜி. இவர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து ஆக. 7ம் தேதி ஆய்வு செய்தார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் கிளம்பினார். சேலத்தை அடுத்த காகாபாளையம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்தார்.

 

அதை கவனித்துவிட்ட எஸ்பி பாலாஜி, இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரில் விரட்டிச் சென்றார். அப்போது, காகாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கொண்டலாம்பட்டி ரோந்து வாகன சிறப்பு எஸ்ஐ அந்தோணி, ஓட்டுநர் சிவகுமார் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

ரேஷன் அரிசி கடத்தியவர், வாகனத் தணிக்கையின்போது சிக்கிக் கொள்வோம் என பயந்து, அங்குள்ள மண் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றார். அப்போது எஸ்பி பாலாஜி, ரோந்து வாகன ஓட்டுநரான காவலர் சிவகுமாரிடம் ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை மடக்கிப் பிடிக்கும்படி கூறினார்.

 

அப்போது அவர், வாகனத்தை துரத்திப் பிடித்தால் அவர்கள் தாக்குவார்கள் என தெரிவித்ததோடு, வாகனத்தை பிடிக்கச் செல்லாமல் அங்கேயே நின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்பி பாலாஜி, ரோந்து வாகனத்தை ஓட்டுநர் சிவகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

 

இந்த களேபரத்தில், ரேஷன் அரிசி கடத்திய நபர், தப்பிச் சென்றுவிட்டார்.

 

இதற்கிடையே, காவலரை எஸ்பி அறைந்த சம்பவம் சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

காவலர் சிவகுமார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சேலம் மாநகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா விசாரணை நடத்தினார். அப்போது சிவகுமார், தன்னை அறைந்த எஸ்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எழுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த சம்பவத்தின் பரபரப்பு சற்று அடங்கியது.

 

என்றாலும், பாதிக்கப்பட்ட காவலர் முதலில் எஸ்பி மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்ததாகவும், பின்னர் அவர் மிரட்டப்பட்டதால் புகாரை திரும்பப் பெற்றதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேநேரம், சம்பந்தப்பட்ட எஸ்பியே அந்தக் காவலரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதன்பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் என்று காவலர் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.

 

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தன் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு காவலரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு காவல்துறை வட்டாரத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.