Skip to main content

இன்ஸ்பெக்டர் உட்பட நால்வர் அதிரடி இடமாற்றம்... பரபரப்பில் ராமநாதபுரம் காவல்துறை...

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று போலீசார் உட்பட நால்வரை, ஒரே இரவில் காவல் நிலையப் பணியிலிருந்து அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. இந்த இடமாற்றத்திற்குக் காரணம், மணல் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை நபர்களுடனான தொடர்பே..? என கிசுகிசுத்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையினர்.

 

sayalkudi inspector transfered

 

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கனகாபாய். இதே காவல் நிலையத்தில் தங்கச்சாமி, முத்துராமலிங்கம் மற்றும் பழனியாண்டி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த காவல் நிலையத்திற்குட்பட்ட மலட்டாறு, கூராங்கோட்டை, எம்.கரிசல்குளம் மற்றும் மூக்கையூர் பகுதிகளில் திருட்டு மணல் கடத்தலும், மாரியூர் கடற்கரை, கடுகுசந்தை சத்திரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் மற்றும் சாயல்குடியில் சட்டவிரோத மது மற்றும் கஞ்சா விற்பனைகள் பெருமளவில் நடந்து வந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் பலர் பலமுறை புகாரளித்தும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது இன்ஸ்பெக்டர் கனகாபாய் தலைமையிலான டீம். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட எஸ்.பி.வருண்குமாருக்கு இப்பிரச்சனை  தெரியவர, அதிரடியாக இன்ஸ்பெக்டர் கனகாபாய் உட்பட 4 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். விவகாரம் பெரிதாகமால் இருக்க, " புகார்களை சரியாக விசாரிப்பதில்லை. அதனால் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்" என இடமாற்றத்திற்கான காரணத்தையும் கூறி சமாளித்துள்ளது மாவட்ட காவல்துறை. எனினும், இடமாற்ற விவகாரத்தால் மாவட்ட காவல்துறைக்குள் பரப்பரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குவைத் தீ விபத்து சம்பவம்; தமிழருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Kuwait Fire Incident; Tragedy happened to Tamils

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

Kuwait Fire Incident; Tragedy happened to Tamils

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளவும்” எனத் தெரிவித்திருந்தார். 

Kuwait Fire Incident; Tragedy happened to Tamils

இந்நிலையில் இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 

Next Story

டன் கணக்கில் சிக்கிய தேளி, டேங்க் கிளீனர் மீன்கள்; புதைத்து அழித்த அதிகாரிகள் 

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Tons of trapped , tank cleaner fish,African catfish ; Officials who buried and destroyed

அரசால் தடை செய்யப்பட்ட, சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்ட மீன்களில் ஒன்று ஆப்பிரிக்க தேளி வகை மீன்கள். அதிக கொழுப்பு சத்துக் கொண்ட இந்த மீன்களை சாப்பிட்டால் புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் வரும் என்பதால் இவை உண்ணக்கூடாத மீன் வகைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர்நிலைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படும் பொழுது நாட்டு வகை மீன்களை உணவாக எடுத்துக் கொள்ளும் இந்த வகை தேளி மீன்கள், தான் வளர்க்கப்படும் இடத்தையே மோசமான நிலைக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு மிகவும் ஆபத்தானவை.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் கிலோ கணக்கில் ஆப்பிரிக்க தேளி மீன்கள் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்திருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் ஒரு டன் எடையுள்ள தேளி மீன்கள் மற்றும் டேங்க் கிளீனர் மீன்கள் இருந்தது தெரியவந்தது.

இந்த வகை மீன்கள் மற்ற மீன்களைப் போல் தாவரங்களை உண்ணுவதில்லை மற்ற மீன்களை சாப்பிட்டு அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் அது வளர்க்கப்படும் நீர் நிலையையே  மாசடைய வைத்து விடுகிறது. கைப்பற்றப்பட்ட ஆயிரம் கிலோ தேளி மீன்களையும் குழி தோண்டி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதைத்தனர்.