Skip to main content

சாத்தான்குளம் சிறுமி படுகொலை சம்பவம்!!! உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

sathankulam incident

 

சாத்தான்குளத்தில் 8 வயதுடைய சிறுமியின் உடல், தண்ணீர் பிடிக்க பயன்படுகிற டிரம் ஒன்றில் வைக்கப்பட்ட நிலையில், பாலத்தின் அடியில் கிடக்கிறது என்று வந்த தகவலினடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எஸ்.ஐ.யான முத்துமாரி (தந்தை மகன் படுகொலையால் சாத்தான்குளத்தின் ஒட்டு மொத்தக் காவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர்) வடலிவிளை கிராமத்தின் பக்கமுள்ள அந்த சிறிய பாலத்திற்கு விரைகிறார். டிரம் ஒன்றில் வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 8 வயதுடைய சிறுமி உடலின் வாய் மற்றும் உதடுப் பகுதிகளில் ரத்தக்கசிவுடன் தலையில் காயமும் காணப்பட்டிருக்கிறது.

 

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு அடித்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்கின்றனர். மேலும் அவர்களின் முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமி அருகிலுள்ள கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த சேகர், உச்சிமாகாளி தம்பதியரின் மகள் என்பது தெரிய வந்திருக்கிறது. சடலமாக கிடந்த  8 வயது சிறுமி, தம்பதியரின் இரண்டு பிள்ளைகளில் இளையவர், பள்ளியில் 3ம் வகுப்பு படிப்பவராம்.

 

sathankulam incident

 

சில ஆண்டுகட்கு முன்பு கணவர் சேகர், தன் மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து சென்றுவிட, கூலி வேலையின் மூலம் தன் இரண்டு பிள்ளைகளையும்  கவனித்து வந்திருக்கிறார் உச்சிமாகாளி. நேற்றைய தினம், அவர் கூலி வேலைக்கு சென்றிருக்கிறார். பள்ளிகள் மூடப்பட்டதால் பொழுது போக்கிற்காக பக்கத்து வீட்டில் டி.வி. பார்க்கும் பழக்கத்தால் நேற்று டி.வி. பார்க்கப்போன சிறுமி முத்தார் காணவில்லை, அதன்பிறகு சிறுமியின் உடல் கிடந்த தகவலே எட்டியிருக்கிறது.

 

sathankulam incident

 

போலீஸ் விசாரணையில், சிறுமியின் ஊரான கல்விளைச் சேர்ந்த இருவர் மொபட்டில் டிரம்மில் வைக்கப்பட்ட சிறுமியின் உடலைப் பாலத்தினடியில் போட்டு விட்டுச் சென்ற தகவலும் போலீசாரை எட்டியிருக்கிறது, அவர்கள் சிறுமியின் வீட்டுப் பக்கம் உள்ளவர்களாம். கஞ்சா போதை காரணமாக சிறுமி கொல்லப்பட்டாரா, கொலையான பின்பு டிரம்மில் வைத்து வீசப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் போலீசார். மேலும் அந்த பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் தற்போது அதிகமாகியிருப்பதாகவும் பேசப்படுகிறது.

 

சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார், மேலும் வன்கொடுமை செய்யவில்லை. கழுத்தை நெறித்து கொன்றதாக பிடிபட்ட அந்த நபர் கூறியுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த முத்து ஈஸ்வரன் உட்பட இருவர் சிக்கியுள்ளதையும் சிறுமியின் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடப்பதையும் சொல்கிறார் மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார்.

 

ஆனால் சிறுமியின் தாயான உச்சிமகாளியோ, எனக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் 10 பவுன் நகை தர வேண்டும். அதற்கான பிரச்சனையும் உள்ளது, அவர் கடத்தி இப்படிச் செய்திருக்கலாம் என்கிறார். உடலைக் கைப்பற்றிய போலீசார் பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ள நிலையில், இழப்பீடு வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.