Skip to main content

மணல் கடத்தலில் அமைச்சர்களுக்கு பங்கு - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 11/06/2018 | Edited on 11/06/2018
Thirumavalavan


கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, 
 

பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

 

 

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. மணல் கடத்தலில் அமைச்சர்கள் வரை பங்குண்டு. இது குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ராகுல்காந்தி கலந்து கொள்வார். அவருடைய தேதி கிடைத்த பிறகு மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நீட் தேர்வால் சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்பதால் எதிர்க்கிறோம்” - திருமாவளவன்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Thirumavalavan said  We oppose NEET because social justice is affected

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய திருமாவளவன் எம்.பி, “நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டிருப்பதால் ரத்து செய்யக் கூறவில்லை. நீட் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாலும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்பதாலும் தான் எதிர்க்கிறோம். மாநில அரசு அதிகாரம் பறிக்கப்படுகிறது. சமூகநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாக உள்ளது. விளிம்பு நிலை மக்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதலை தொடுக்கக் கூடாது எனவே நீட் வேண்டாம். 720 க்கு 720 / 719 / 718 மார்க எப்படி வந்தன? கோடிக்கணக்கான ரூபாய் நீட் தேர்வு தொடர்பான ஊழல் முறைகேட்டில் புழக்கத்தில் உள்ளன. நீட் பயிற்சி அளிக்கின்ற மையங்கள் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கின்றன. மத்திய அரசு மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரத்தை எடுத்துக் கொள்கிற ஆதிக்க போக்கை கண்டிக்கிறோம். நீட்டுக்கு முன் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே சிபிஎஸ்சி மாணவர்கள் தேர்ச்சி பெற முடிந்த நிலையில் நீட்டுக்கு பிறகு 60% பேர் ஆக மாறியுள்ளது. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி தற்போது இரண்டு சதவீதத்திற்கும் கீழே அமைந்துள்ளது.

நீட் தேர்வு சிபிஎஸ்சி மற்றும் வசதிப் படைத்த மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்தியாவில் OBC சமூக தலைவர்கள் தங்களை வளர்க்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் பாஜகவை ஆதரிக்கிறார்கள். சந்திரபாபு மூலம் ஆந்திராவிலும், எடியூரப்பா மூலம் கர்நாடகாவிலும், சுரேஷ் கோபி மூலம் கேரளாவிலும் கால் பதித்துள்ளனர். அவர்கள் குதிங்கால் பதிக்காத இடம் தமிழ்நாடு தான். இந்த நொடி வரை அதை சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாகத் தான் தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில் எப்படியாவது ஐந்து இடங்களை வெற்றி பெற்று விட வேண்டும் எனப் பாஜகவினர் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியும். தமிழ்நாட்டு மக்களிடையே அந்தப் புரிதல் வலுவாக உள்ளது. 

திமுக கூட்டணி பலத்தால் வென்று குவித்து விட்டோம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்ற புரிதல், கருத்தியல் மக்களுக்கு கணிசமாக இருக்கிறது. பாஜக ஆர்எஸ்எஸ் சங்பரிவார் எதிர்ப்பு தமிழ் மண்ணில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதற்கு அடிப்படை பெரியார், திராவிடர் இயக்கங்கள் தான். இனி தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கும் மண்டலுக்கு முன் - மண்டலுக்கு பின் என்றுதான் பகுப்பு ஆய்வு செய்ய வேண்டியது இருக்கும். பாஜக கூட்டணியிலிருந்து யாரை இந்தியா கூட்டணி பக்கம் இழுக்கலாம் என்பதை விட இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தான் அவசியம். இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை இழுப்பதற்காக மோடி, அமித்ஷா எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். 

மைனாரிட்டி அரசாக இதனைக் கொண்டு செல்ல நினைப்பார்கள் என்றெல்லாம் நாம் நினைக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்குக் கூட அவர்கள் முயற்சிப்பார்கள். நீட்டை ஒழிப்பதாக இருந்தாலும், சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான கோணத்தில் சங்பரிவர்களை, அவர்களுக்கு எதிரான செயல் திட்டங்களை வரையறுப்பதுதான் நம் முன்னால் இருக்கக்கூடிய மிக முக்கியமான சவால்", என்றார்.  

Next Story

''மழைக்கால தவளையைப் போல் கத்தினார்கள் மலரும் மலரும் என்று'' - திருமா பேச்சு

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
nn

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்ற நிலையில் கோவையில் திமுக கூட்டணியின் வெற்றியை கொண்டாடுவதற்காக முப்பெரும் விழா நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி இன்று திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்க கோவையில் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவன், துரை வைகோ, ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேடையில் தொல்.திருமாவளவன் பேசுகையில், ''தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்திலும் அடுத்தடுத்து வெற்றியைச் சந்தித்துள்ளது திமுக. இப்பொழுது நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில், ஏன் இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி தொடர் வெற்றியைப் பெற்ற ஒரு கட்சி; ஒரு தலைமை எதுவுமே இல்லை. இதை நாம் வெளிப்படையாக பாராட்டியாக வேண்டும். அதற்குக் காரணம் அவருடைய அணுகுமுறை தான்; அவர் கையாளுகின்ற உத்திகள்தான்; அவருடைய ஆளுமைதான்; அவர் வழி நடத்தி வருகின்ற இந்தக் கூட்டணியின் பலன்தான்.

2019 க்கு முன்னரே காவிரி நீர் பிரச்சனையை ஒட்டி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். அது இன்றும் தொடர்கிறது. பொதுவாக தேர்தல் காலத்தில் கூட்டணிகள் அமையும் உடனே கலைந்து போய் விடுவார்கள், சிதறி போய்விடுவார்கள். அந்தக் கூட்டணியில் அடுத்த தேர்தல் வரை தொடர்வது கிடையாது. அதிமுக பாஜக கூட்டணி அப்படித்தான். ஆனால் திமுகவின் தலைமையில் உருவாகியுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னரே மக்களின்  பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து உருவான கூட்டணி. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை முன்னிறுத்தி உருவான கூட்டணி. அதுதான் இன்றைக்கும் தொடர்கிறது.

நான்கு தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. எந்தச் சலசலப்பும் இந்தக் கூட்டணியில் இல்லை; சிதறல் இல்லை. ஒரே நாள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகளை பங்கீடு செய்து உடனே களத்துக்கு வேட்பாளர்களை அனுப்பியவர் அணியின் தலைவர், தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுதான் அவருடைய ஸ்டேடர்ஜி. அதுதான் அவருடைய பலம். தொகுதிப் பங்கீடு செய்கின்ற போது கூட கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும்; கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் எந்த நிலையிலும் வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது அதில் கவனம் செலுத்துகிற ஒரு தலைவர்.

உதாரணத்திற்கு இதே கோவை தொகுதியில் போன முறை 2019-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை நீங்கள் கோவையில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு நாங்கள் வென்ற  திண்டுக்கல் தொகுதி தருகிறோம். ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி, அந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு கோவையில் இந்த ரிஸ்கை நாங்கள் எடுக்கிறோம். இங்கே ஒருவர் மழைக்காலத்து தவளையைப் போல் கத்திக் கொண்டு இருக்கிறார் 'தாமரை மலரும்.. தாமரை மலரும்..' என்று. திமுக வீழும், திமுக கூட்டணி வீழும் என்று உளறிக்கொண்டு இருக்கிறார். சாதிக்க போகிறோம் என்று நாடு முழுக்க நடந்து போகிறார். கோவையில் வெற்றி உறுதி உறுதி என்று திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு வேண்டாம் அந்த ரிஸ்க் என திமுக போட்டியிட்டது. தமிழகத்தில் பாஜக எப்பொழுதும் வேரூன்ற முடியாது'' என்றார்.