Skip to main content

மனைவியைக் கழுத்து அறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

salem district husband and wife police investigation

 

சேலம் அருகே, திருமணம் ஆன 43 நாளிலேயே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை அடுத்த கோராத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). விவசாயி. வீட்டைச் சுற்றி சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருடைய மனைவி மோனிஷா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 43 நாள்கள் மட்டுமே ஆகின்றன. தங்கராஜ், பகுதி நேரமாக கேபிள் டிவி வயர் இணைப்பு கொடுக்கும் வேலையும் செய்து வந்தார்.

 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப். 6) இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு, தூங்கச்சென்றனர். புதன்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

 

வீட்டுக்குள், மோனிஷா கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தங்கராஜ், கேபிள் டிவி வயரில் தூக்கிட்டு சடலமாகத் தொங்கினார். சடலங்களைக் கண்டு உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து வீராணம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அஸ்தம்பட்டி சரக காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

 

இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் நடந்த சில நாள்களிலேயே மோனிஷாவின் நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதையும் கணவர் கண்டித்துள்ளார்.

 

சேலம் கன்னங்குறிச்சிதான் மோனிஷாவின் சொந்த ஊராகும். அங்கு மோனிஷாவின் அத்தை மோகனா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர், மோனிஷாவின் தங்கையிடம் நெருங்கிப் பழகி வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த மார்ச் 24- ஆம் தேதி, அவருடைய அத்தை மகனுக்கு பிறந்த நாள் வந்தது. இதையடுத்து அவர் பிறந்த நாளை கொண்டாட கோராத்துப்பட்டியில் உள்ள மோனிஷா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், அவருக்கு கேக் கொடுத்துள்ளார். இதை நேரில் பார்த்த தங்கராஜூக்கு, மனைவியின் நடத்தையில் மேலும் சந்தேகம் வலுத்தது. அந்த நாளில் இருந்து தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

மனைவி தடம் மாறிவிட்டதாக கருதிய தங்கராஜ், அவரை தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளார். இதையடுத்து ஏப். 6- ஆம் தேதி மனைவியை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்கிறது காவல்துறை தரப்பு. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.