Skip to main content

தண்ணீரில் மிதக்கும் ரேசன் அரிசி; கண் கலங்கும் விவசாயிகள்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

ration rice floating in water; Dazzling farmers

 

திருவாரூர் அருகே 2000 கிலோ ரேஷன் அரிசி ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் சம்பவம் விவசாயிகள் வட்டாரத்தில் வேதனையை உண்டாக்கியுள்ளது.

 

திருவாரூர் அருகே திருக்காரவாசல் வெள்ளையாறு பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பாலத்தில் நேற்று இரவு லாரி ஒன்று வந்து நின்றது. அதைக் கண்ட பாதசாரிகளும், பொதுமக்களும் சாதாரணமாக நிற்கிறது என்று கடந்து சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் குறைந்ததும் லாரியிலிருந்த மர்ம நபர்கள் சிலர் சுமார் 50 மூட்டைக்கும் அதிகமான 2 ஆயிரம் கிலோ அரிசியைப் பாலத்திற்கு அடியில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே தண்ணீரில் குவியலாகக்  கொட்டிவிட்டு லாரியை விரட்டிச் சென்றுவிட்டனர்.

 

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்ற லாரி அதிவேகமாகப் போவதைக் கண்ட இளைஞர்கள் சிலர் அங்கு கொட்டப்பட்டிருந்த அரிசி குவியலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் மற்றும் இணையத்தில் வெளியிட, அந்தப் பதிவு இப்போது வைரலாகியுள்ளது. தகவலறிந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.ஐ தென்னரசு உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தண்ணீரில் போனது போக மீதமிருந்த அரிசியையும் போலீசார் மீட்டனர். 

 

ration rice floating in water; Dazzling farmers

 

இந்த அவலம் குறித்து விவசாய சங்க நிர்வாகி சுப்பையன் கூறுகையில், “நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 மாக உயர்த்தி வழங்க வேண்டுமென அரசை வலியுறுத்திக் கொண்டுள்ள நிலையில், வியர்வையில் விளைந்த நெல்லில் கிடைத்த அரிசியை இப்படி ஆற்றில் கொட்டி விரயமாக்குவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.

 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள துறைகுடி கிராமத்தில் ராஜகுரு என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3280 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததோடு ராஜகுருவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் இன்று ரேஷன் அரிசியை ஆற்றில் கொட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.