Skip to main content

ஊரெல்லாம் சுத்தம் செய்ற துப்புறவுப் பணியாளர்கள் மனசுல எத்தனை அழுத்தம்!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

நாம நல்லா இருக்கனும் என்பதற்காக எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் துப்புறவுப் பணியாளர்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களைக் கண்டாலே தூரமாக ஒதுங்குவதும், முகம் சுளிப்பதும் அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனாலும் தங்கள் பணி ஊரை சுத்தமாக வைத்து மக்களுக்கு நோய் வராமல் தடுப்பது.. கடமையை செய்வோம்.. பலனை எதிர்பார்க்க வேண்டாம் என்று அதிகாலை முதல் தங்கள் பணியை செய்து கொண்டே போகிறார்கள்.

 

pudukottai Scavengers


இந்தநிலையில்தான் எந்த ஒரு திட்டத்திலும் முதன்மையாக விளங்கும் புதுக்கோட்டை துப்புறவுப் பணியாளர்களின் மனதை படிப்பதிலும் முதன்மையாக செயல்பட்டிருக்கிறது. மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம். பணிக்கு வந்த சில நாட்களில் தனது பணியை சிறப்புடன் செய்யத் தொடங்கினார். தடைகள் பல கடந்தார். இப்போது ஆதரவாக சுகாதாரத்துறை இருப்பதால் தான் செய்ய நினைப்பதை செய்து கொண்டிருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டு கர்ப்பிணியாக்கப்பட்டு சாலை ஓரங்களில் கிடந்த இளம் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சையும், பிரசவமும் செய்து வந்தார். எந்த ஊரில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் யார் நின்றாலும் அவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சையும், அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவுரையும் வழங்கி அனுப்பி வைக்கிறார்.

மனநல வியாழன் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தொடங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை விரிவு செய்து ஒவ்வொரு நாளும் ஒரு மருத்துவமனையில் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கி வருகிறார். 104 அவசர அமைப்புகளுக்கு என்று தனி இலவச அழைப்பும் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில்தான் மாநிலத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை நகரை தூய்மையாக வைத்திருக்கும் துப்புறவுப் பணியாளர்கள் எந்த அளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏன் மனநல ஆலோசனைகள் வழங்க கூடாது என்று முடிவெடுத்து. நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனிடம் (பொ) இது பற்றி பேச.. அவரும் முகாம் நடத்தலாமே என்று சொன்னதால் 18 ந் தேதி பழைய மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சுகாதரா இணை இயக்குநர் சந்திரசேகரன் தலைமையில் முகாம் தொடங்கியது.

 

pudukottai Scavengers

 

முகாமில் 103 துப்புறவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் தனித்தனியாக பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களிடம் பேசிய போது தான்.. நாங்கள் நகரை காத்து மக்களை நோயின்றி வைத்திருக்கிறோம். ஆனால் எங்களை இந்த சமூகம் இழிவாக பார்க்கிறது என்ற மன அழுத்தம் அதிகமாக இருப்பது பண்டறியப்பட்டது. அதேபோல தாங்கள் தான் இப்படி சாக்கடையோடு புரண்டு வருகிறோம் எங்கள் குழந்தைகள் நல்லா படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. பலரும் அய்யா இதுவரை எங்களை யாரும் கண்டுக்கல. ஒரு காய்ச்சல்ல நாங்க கிடந்தாலும் மெடிக்கல்ல மாத்திரை வாங்கி போட்டுக்கும் வந்து சாக்கடை அள்ளுவோம். உங்க உடல் நலன் பற்றி நாங்க கவலைப்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக எங்கள் உடல்நலனில் அக்கரை கொண்டு எங்களையும் சக மனிதாக மதித்து ஆலோசனை சொல்றீங்க பாருங்க அதுவே எங்களுக்கு மன நிறைவா இருக்கும் என்றும் பலரும் பல அழுத்தங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் 32 பேருக்கு மன அழுத்த பிரச்சனை இருப்பதும் 15 பேருக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு போதிய ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாங்க வந்து உங்கள் குறைகளை மனம் விட்டு சொல்லுங்க அப்பறம் உங்களுக்கு மன அழுத்தம் இருக்காது என்று மருத்துவர் குழுவினர் சொன்ன போது.

அய்யா எங்களையும் மதிச்சு சிகிச்சை கொடுத்தீங்களே உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கிறோம் என்று சொல்ல செல்பி எடுத்துக் கொண்டு விடை பெற்றார்கள். இதேபோல ஒவ்வொரு மாவட்டதிலும் துப்புறவுப்பணியாளர்களுக்கு சிறப்பு மனநல முகாம்கள் நடத்தி அவர்களின் மன அழுத்தம் குறைத்தால் சிறப்பாக இருக்கும்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேங்கை வயல் சம்பவம்; அவகாசம் கேட்கும் சிபிசிஐடி

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
vengaivayal incident; CBCID seeking time

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகிறது. விசாரணை 545 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல்பூர்வமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு முடியும் நிலையில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தற்பொழுது இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றமும் அனுமதி வழங்கி இருக்கிறது. வருகின்ற மூன்றாம் தேதிக்குள் (ஜூலை 3) இந்த வழக்கை முடிக்க சென்னை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருந்தது.  அதனடிப்படையில் ஜூலை மூன்றாம் தேதி இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். இந்த அதில் குற்றவாளிகளை உறுதிப்படுத்துதல்; வழக்கு என்ன நிலையில் இருக்கிறது; வழக்கு முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.

Next Story

அடுத்தகட்டத்திற்கு தயாராகும் பொற்பனைக்கோட்டை; துவக்கி வைக்க இருக்கும் முதல்வர் 

Published on 17/06/2024 | Edited on 17/06/2024

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை களில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தளம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குநராகக் கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர்.

அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடு செங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் (18/06/2024) செவ்வாய்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொள்கின்றனர்.

இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.