Skip to main content

3 வருடத்திற்கு ஆடல் பாடலை நிறுத்துவோம்.. நீர்நிலைகளை உயர்த்துவோம்.. தீர்மானம் போட்ட கிராம மக்கள்...

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

3 ஆண்டுகளுக்கு திருவிழாக்களில்ஆடல் பாடலுக்கு செய்யும் செலவை நிறுத்தி, அதற்கு பதிலாக கிராமத்தில் உள்ள நீர்நிலைகள், பள்ளி, கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்துவது  என்று தஞ்சை மாவட்டம் நாடியம் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றி இருகின்றனர். கிராம மக்களின் இந்த முடிவு பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் எந்த சூழ்நிலையிலும் டாஸ்மாக்கை ஊருக்குள் நுழையவிடமாட்டோம் என்பதையும் அழுத்தமான தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் கிராம மக்கள்.

 

pudhukottai nadiyam village

 

 

'கிராமங்களின் வளர்ச்சி இளைஞர்களின் கையில்' என்பதை சமீபகாலமாக டெல்டா மாவட்ட இளைஞர்கள் நிருபித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் கீழே போகிறது மணல் திருட்டை தடுங்கள், நீர்நிலைகளை பலப்படுத்துங்கள் என்று கிராம மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். போராட்டங்களை நடத்தினார்கள், ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. குடிக்க தண்ணீர் இல்லை என்று காலிக்குடங்களுடன் சாலைக்கு வந்தார்கள். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தார்கள். எல்லா வகையிலும் கேட்டாச்சு இனி எதையும் எதிர்பார்க்க முடியாது என்ற நிலையில், படிக்கவும், படித்துவிட்டு வேலைக்காகவும் வெளியூர், வெளிநாடுகள் என்று சென்ற இளைஞர்கள் சொந்த ஊரை திரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். இப்பவே தண்ணீர் இல்லை என்றால் இன்னும் சில வருடங்களில் முற்றிலும் வற்றிப் போகும். அதனால் நமக்கு நாமே நல்லதை செய்து கொள்வோம் என்று தஞ்சாவூர் மாவட்டம் களத்தூரில் களமிறங்கிளார்கள். இளைஞர்கள் கையிலிருந்து ரூ. 59 லட்சத்தை செலவு செய்து நீர்நிலைகளை சீரமைத்தார்கள், வரத்து வாய்க்கால்களை வெட்டி சீர்செய்தார்கள். அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பு இருந்து காணாமல் போன பாசன வாய்க்காலை கண்டுபிடித்து 5 கி.மீ வெட்டி சீர்செய்தார்கள். வாய்க்கால் வெட்டி முடிக்கும் போது ஆற்றில் தண்ணீர் நின்று போனது. கீரமங்கலத்தில் காட்டாற்றில் மண்ணால் தடுப்பணை கட்டி குளத்திற்கு தண்ணீரை கொண்டு சென்றார்கள். இவை புயல் நேரத்தில் விவசாயிகளுக்கு  பயிர்களை காக்க கை கொடுத்தது. இப்படி தொடங்கிய பணிகள் அடுத்தடுத்து சேந்தன்குடி, கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு என்று பல கிராமங்களின் இளைஞர்களையும் ஈர்த்தது. சொந்த செலவில் குளம், எரி, வாய்க்கால் என்று சீரமைப்பு பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் நாடியம் கிராமத்தின் வளர்ச்சியை மீட்டுக்க வேண்டும் என்று இளைஞர்கள் முடிவெடுத்தனர். பல ஊர்களிலும் பல்வேறு வேலையாக இருந்தவர்களை தகவல் கொடுத்து அழைத்தனர். 

ஆகஸ்ட் 3 ந் தேதி வெள்ளிக் கிழமை நமது கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைவரும் கூட வேண்டும் என்றார்கள். அதன்படி வெளியூர்களில் இருந்தவர்கள் அத்தனை பேரும் கூடினார்கள். அவர்களில் ஒருவராக அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் கடலூர் மாவட்ட ஆட்சியருமாக அன்புச்செல்வனும் இளைஞர்களின் அழைப்பை ஏற்று வந்திருந்தார். 

கூட்டம் தொடங்கியது.. கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்வது என்று ஒவ்வொருவராக கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் பலரும் பல கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கிராமத்தின் வளர்ச்சிக்காக முதலில் நமக்கு தேவை தண்ணீர். விவசாயத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் வேண்டும். அதற்காக நம் ஊரில் உள்ள 340 ஏக்கர் மற்றும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள 2 ஏரிகளையும், 7 குட்டைகளையும் மீட்டு தூர்வாரி தண்ணீரை நிரப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை செய்ய வேண்டும் போன்ற கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை 3 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கான நிதி ஆதாரமாக, 3 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் 10 நாட்கள் நடக்கும் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அதற்காண தொகையை நீர்நிலை, பள்ளி, கிராம வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

இறுதியாக அத்தனை வளர்ச்சிப் பணிகளையும், இளைஞர்களையும் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைய நாடியம் ஊராட்சி எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றிய போது கிராம மக்கள் அனைவரும் ஒரே குரலில் சம்மதம் தெரிவித்தனர். 

தீர்மானத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதால் முதல்கட்டமாக வரும்  சனிக்கிழமை முதல் நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடங்க உள்ளனர். 

நாடியம் கிராம இளைஞர்களின் இந்த தீர்மானம் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதால் அவர்களும் கிராம கூட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் பல கிராமங்களில் கிராம கூட்டங்கள் நடக்கும் அரசாங்கம் செய்ய தவறிய பணிகளை இளைஞர்களும், கிராம மக்களும் முன்னெடுத்து செய்வார்கள் என கூறப்படுகிறது.

டெல்டாவில் தொடங்கிய இந்த இளைஞர்களின் எழுட்சி தமிழகம் முழுவதும் பரவி நீர்நிலை சேமிப்பு என்ற புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அந்த புரட்சி தான் நாளை நம் சந்ததிகளுக்கு தாகம் தணிக்க தண்ணீரை கொடுக்கும், சுயமாக சுவாசிக்க நல்ல காற்றையும் கொடுக்கும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மது போதையில் ஞாயிறுகளில் நடக்கும் கொலைகள்; அதிர்ச்சியில் மக்கள்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

  young man was passed away in drunkenness
ஆறுமுகம் - அருள் 

 

கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் அருள் (45). சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நூற்றுக்கணக்கான கார்களுடன் பிரபலமான மாப்பிள்ளை டிராவல்ஸ் வைத்து  நடத்தியவர். ஏதோ சில காரணங்களால் சொந்த ஊருக்கு வந்து கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை(1.10.2023) இரவு தனது உறவினரும் நண்பருமான அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மகன் ஆறுமுகத்துடன் கீரமங்கலம் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் ஆறுமுகம் ஒரு கத்தியால் அருளை சில இடங்களில் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற அருளின் பின்னாலே சென்ற ஆறுமுகம் கழுத்து, தலை, முதுகு என 9 இடங்களில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அருள் அங்கேயே சரிந்தார். 

 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருளை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்ப தயாரானபோது சிகிச்சை பலனின்றி அருள் உயிரிழந்தார்.  இதனையடுத்து நேற்று அருளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் அருளை கொலை செய்த ஆறுமுகத்தை பொதுமக்களே பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகராற்றில் ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்த்தனர். 

 

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கீரமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் கட்டட வேலை செய்து வந்த அய்யாச்சாமி மகன் முருகன்(30), மற்றும் அவரது ஊரை சேர்ந்த முருகனின் உறவினர்களான தன்னக்குட்டி மகன் தனசேகரன்(29), தன்னக்குட்டி மகன் தங்கச்சாமி(53) உட்பட 5 பேர் கீரமங்கலம் அண்ணாநகர் கட்டிட ஒப்பந்தக்காரரான லெட்சுமணனிடம் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

 

இவர்கள் மேற்பனைக்காடு கிராமத்தில் கட்டடம் கட்டும் இடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்த நிலையில் ஏப்ரம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முருகன் தனசேகரன், தங்கச்சாமி ஆகியோர் கீரமங்கலம் வந்து மது குடித்துவிட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது, முருகனுக்கும் தனசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அப்போது வாக்குவாதம் முற்றி தனசேகரன் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து முருகன் மண்டையில் பலமாக தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் கீழே சாய்ந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியில் நின்றவர்கள் தனசேகரனை பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

அதே போல கடந்த ஆண்டு மே மாதம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் அருள்(38). கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் இரவு நேர உணவு விடுதி நடத்தி வருகிறார். இரவு கடை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற போது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்றுள்ளது. தனது நண்பரை பெட்ரோல் வாங்கி வரச் சொல்லிவிட்டு நின்ற போது அருகில் உள்ள வீட்டில் நின்ற நாய் குறைத்ததால் அருள் நாயை தாக்கியதாக கூறப்படுகிறது. 

 

 young man was passed away in drunkenness

 

இதைப் பார்த்த நாயின் உரிமையாளருக்கும் அருளுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அருள் அங்கிருந்து மீண்டும் கீரமங்கலம் நோக்கி சென்ற போது வேம்பங்குடி மேற்கு அண்ணாத்துரை மகன் தினேஷ் (30), கீரமங்கலம் தர்மர் கோயில் தெரு அண்ணாத்துரை மகன் மதன் (எ) சுரேஷ்குமார் (22) ஆகியோர் அருளை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருள் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்ற நிலையில் மயக்கமடைந்து வாந்தி எடுத்ததால் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

கீரமங்கலத்தில் கடந்த சில மாதங்களில் டாஸ்மாக் கடைகள் அருகே, கடைவீதிகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் மது போதையில் அடுத்தடுத்து 3 கொலைகள் அதுவும் உறவினர்களை உறவினர்களே கொன்ற சம்பவம் தொடர்ந்து அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

குலதெய்வம் கோவிலுக்கு வந்த குடும்பம்; குளத்தில் பறிபோன 3 உயிர்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

A family who came to the clan deity temple for prayers; 3 lives were passed away in temple itself

 

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகள்களான அக்க்ஷயா(15), தனலெட்சுமி (12) மற்றும் உறவினர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்து விடுதி கிராமத்தில் அமைந்துள்ள தங்கள் குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வந்துள்ளனர். இவர்களுடன் விஜயகாந்தின் தம்பி ஆனந்தகுமார் (29)  வந்துள்ளார்.

 

விஜயகாந்த்தின் குடும்பத்தினர் திங்கள் கிழமை மதியம் பள்ளத்திவிடுதி வந்து சேர்ந்தனர். இந்நிலையில் பயணக் களைப்பு தீர அதே கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் குளத்தில் குளிப்பதற்காக அக்க்ஷயா மற்றும் அவரது தங்கை தனலெட்சுமி அவர்களது சித்தப்பா ஆனந்தகுமார் ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.

 

குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது தனலட்சுமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற அக்க்ஷயாவும் ஆனந்தகுமாரும் முயன்றுள்ளனர். அதற்குள் தனலெட்சுமி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். தனலட்சுமியை காப்பாற்ற இவர்களும் அங்கே சென்ற போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். நெடு நேரத்திற்கு பின் மூவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் அவர்களை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதன்பின் மூவர் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோடை காலங்களில் குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் இது போன்ற துயரச் சம்பவ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். தங்களின் வேண்டுதல் நிறைவேற குலதெய்வத்தை வழிபட தொலை தூரத்தில் இருந்து வந்தவர்களுக்கு நடந்த துயர சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.