Skip to main content

பழனி முருகன் கோயில் அர்ச்சகரை மிரட்டும் இந்து அமைப்பினர்! தலைமையிடம் புகார் தெரிவிக்கும் அர்ச்சகர்கள்!!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றக்கூடிய பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்து வருகிறது. பழனியில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள்,  சிவாச்சாரியார்கள் நாள்தோறும் பூஜை முறைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மலைமீது உள்ள முருகன் கோவிலிலும் , மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி முருகன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியஆவுடையார் கோவில் போன்றவற்றில் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

 

Pazhani Murugan Temple threatens to Archagar; reporting to the leadership !!


கோயில் அர்ச்சகர்கள் பூஜை நேரங்களில் கோவில்களை சுத்தம் செய்து முறையாக பூஜைகளை செய்து வருகின்றனர். பழனியில் செயல்பட்டு வரக்கூடிய இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பழனியில் உள்ள மலை கோயில்களுக்கு நாள்தோறும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படி  கோயிலுக்கு செல்லும் இந்து அமைப்பினர் கோயிலில் பணியில் இருக்கக்கூடிய அர்ச்சகர்களை தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி மிரட்டக் கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருஆவினன்குடி கோவிலுக்கு சென்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவரும், இந்து ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவருமான சாமிநாதன் என்பவர் திருஆவினன்குடி முருகன் கோயிலில் பணியிலிருந்த அர்ச்சகர் ஒருவரை மிரட்டி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கோயிலில் பணியில் இருக்க கூடிய அர்ச்சகர்கள் முறையாக ஆகமவிதிகளை பின்பற்றுவதில்லை,  பூஜை முறைகள் சரிவர நடைபெறவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மிரட்டல் விடுத்து ஆதாயம் தேடி வருவதாக ஆதாரம் அர்ச்சகர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று மலைமீது செல்லக்கூடிய இந்து அமைப்பினரும் கோயில் அதிகாரிகளை மிரட்டியும்,  சிவாச்சாரியார்களை மிரட்டியும் ஆதாயம் தேடுவதாக ஆன்மிகவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்து அமைப்பின் தலைவர்களிடம் இது போன்ற நபர்களை குறிப்பிட்டு புகார் தெரிவிக்க போவதாகவும் பழனியில் உள்ள அர்ச்சகர்களும், ஆன்மிகவாதிகளும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மலைமீது உள்ள போகர் சன்னதியில் தகராறில் ஈடுபட்டு காவல்நிலையம் வரை புகார்கள் சென்று பின்னர் இந்து முன்னணி தலைவர்களால் சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் தொடர்ந்து பழனியில் உள்ள கோவில்களில் இந்து அமைப்பினரின் மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கோயில் இணை ஆணையர் கோவிலில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இதுபோன்று மிரட்டல் நபர்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.