Skip to main content

கட்சியிலிருந்து ஓரம் கட்டியதால் பெரியகுளத்திலிருந்து வெளியேரும் ஓ.ராஜா!

Published on 23/12/2018 | Edited on 23/12/2018

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளமதான் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த ஊர். இந்த ஊரிலேயே ஒபிஎஸ்சின்  உடன் பிறந்த சகோதரரான ஒ.ராஜாவும் குடியிருந்து அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

 

oraja

 

இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை ஆவின் தலைவராக ஒரு.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அன்று மதியமே அதிமுகவின் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ்சும். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இபிஎஸ் சேர்ந்து ஒ.ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக தூக்கியதுடன் மட்டுமல்லாமல் கட்சிக்காரர்கள் எந்த ஒரு தொடர்பும் ஒரு.ராஜாவுன் வைத்துக் கொள்ளக் கூடாது என அதிரடியாக அறிக்கையும் விட்டனர்.

 

அதைக்கண்டு ராஜாவும் அவருடைய ஆதரவாளர்களும் அதிர்ச்சிக்குமேல்   அதிர்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் இப்படி உடன்பிறந்த அண்ணனே கட்சியிலிருந்து தூக்கி விட்டார் என்று நினைத்து மனம் நொந்து போய் விட்டார் ஒ. ராஜா. அதன் பின் பெரியகுளம் வந்த ஒரு.ராஜா தனது ஆதரவாளர்கள் மூலமாக அடுத்த கட்டம் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து வருகிறார். இருந்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்குவதற்கு முன்பு கூட ஒரு வார்த்தை ஓபிஎஸ் போன் போட்டு பேசி  இருக்கலாம் அதை விட்டு விட்டு என்னை அசிங்கப்படுத்திவிட்டார் என ஒ.ராஜா டென்ஷனாகவே இருந்து வருகிறார்.

 

இது சம்பந்தமாக ஒரு.ராஜா ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது....

 

அண்ணன் ஒ.ராஜா தொடர்ந்து பெரியகுளத்தில் இருக்க சங்கடப்படுகிறார். அதோடு தன்னை கட்சியில் இருந்து ஓரம் கட்டி அசிங்கப்படுத்திய அண்ணன் ஓபிஎஸ் முகத்தில் முழிக்க வேண்டிய நிலையும் வரும் அதனால அவர் முகத்திலேயே இனி முழிக்க கூடாது என்ற நோக்கத்தில் தான்  பால் சொசைட்டியை பார்க்கபோகிறார். ஏற்கனவே பால் வியாபாரம் பண்ணி கொண்டிருந்தவர்தான் அதனால்தான் அதன் தலைவராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். மற்றபடி அவர் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே கிடையாது. தற்போது வரை ராஜாஅண்ணன் தான் கட்சிக்காரர்களை அரவணைத்துக் கொண்டு வேண்டிய உதவிகளையும்செய்து கட்சியையும் வளர்த்து வந்தார். அப்படிப்பட்டவரை உடன் பிறந்த அண்ணன் ஓபிஎஸ் கட்சியிலிருந்து தூக்கிவிட்டார். அதனால்தான் இங்க இருக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு அண்ணன் ஒ. ராஜா வந்துவிட்டார். அதனால்  அவருடைய மாமனார் ஊரான உப்பார்பட்டி அருகே உள்ள போலேந்திரபுரத்திற்கு  குடிபோக இருக்கிறார். அங்கு போய் எப்பொழுதும் போல் பால் சொசைட்டி கவனித்துக்கொண்டு அடுத்தகட்ட அரசியலில் ஈடுபடுத்தி கொள்ள தயாராக போகிறார் என்று கூறினார்கள்.

 

 

ஆக அதிமுகவிலிருந்து ஒ.ராஜாவை ஓபிஎஸ்  கட்சியிலிருந்து ஓரங்கட்டியதின்  மூலம்தான் ஒ.ராஜாவும் பெரியகுளத்தை  விட்டு போகப் போகிறார் என்பதுதான் உண்மை!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.